மக்களுக்கு அடுத்த ஷாக்..! தங்கம் விலை இன்று ஒரேநாளில் இரண்டாவது முறை உயர்வு..!

தமிழகத்தில் நேற்று முன்தினம் (ஏப்ரல் 07), 22 காரட் ஆபரண தங்கம் கிராம், 8,285 ரூபாய்க்கும், சவரன், 66,280 ரூபாய்க்கும் விற்பனையானது. நேற்று (ஏப்ரல் 08) தங்கம் விலை கிராமுக்கு, 60 ரூபாய் குறைந்து, 8,225 ரூபாய்க்கு விற்பனையானது. சவரனுக்கு, 480 ரூபாய் சரிவடைந்து, 65,800 ரூபாய்க்கு விற்கப்பட்டது.
இந்நிலையில், இன்று (ஏப்ரல் 09) காலை ஆபரண தங்கம் சவரனுக்கு ரூ.520 உயர்ந்தது. அதன்படி ஒரு கிராம் ரூ. 8290க்கும், ஒரு சவரன் ரூ.66,320க்கும் விற்பனை செய்யப்பட்டது. மதியம் சவரனுக்கு ரூ.960 உயர்ந்தது. ஒரு சவரன் 67,280 ரூபாய்க்கு விற்பனையாகிறது.
ஒரு கிராம் ரூ.8,410க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை ஓரே நாளில் இரண்டாவது முறையாக உயர்ந்து நகைப் பிரியர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.