மக்களுக்கு அடுத்த ஷாக்..! மே 1 முதல் ATM-ல் பணம் எடுக்க எக்ஸ்டரா கட்டணம் வசூல்..!

நீங்கள் அடிக்கடி ஏடிஎம் இல் இருந்து பணம் வித்ட்ராவ் செய்யும் ஒரு நபர் என்றால், இந்த செய்தி உங்களுக்கு மிகவும் முக்கியமானது.
மே 1 முதல் அமலுக்கு வரும் புதுப்பிக்கப்பட்ட ஏடிஎம் விதிகள் மற்றும் கட்டணங்களின் விரிவான விளக்கம் இதோ உங்களுக்காக. ஒவ்வொரு வங்கியும் அதன் சொந்த வங்கி பயனர்களின் ஏடிஎம் கார்டு பரிவர்த்தனைக்கென்று சில குறிப்பிட்ட எண்ணிக்கையிலான இலவச பரிவர்த்தனைகளை அனுமதிக்கிறது.
1. மெட்ரோ நகரங்களில் சொந்த வங்கி ஏடிஎம் சேவை (Own Bank ATM In Metro Cities):
- இங்கு ATM சேவையை பயன்படுத்த மாதத்திற்கு 5 இலவச பரிவர்த்தனைகள் அனுமதிக்கப்படுகிறது.
- கூடுதல் பரிவர்த்தனைக்கு இப்போது ரூ. 21 வரை வசூலிக்கப்பட்டு வருகிறது.
- மே 1, 2025 ஆம் தேதி முதல் இது ரூ. 25 ஆக விலை உயரப்போகிறது. - ஒவ்வொரு கூடுதல் பரிவர்த்தனைக்கு 4 ரூபாய் கூடுதலாக இனி வசூலிக்கப்படும்.
2. மெட்ரோ அல்லாத நகரங்களில் சொந்த வங்கி ஏடிஎம் சேவை (Own Bank ATM In Non-Metro Cities):
- இங்கும் 1 மாதத்திற்கு 5 இலவச பரிவர்த்தனைகள் அனுமதிக்கப்படுகிறது.
- கூடுதல் பரிவர்த்தனைக்கு இப்போது வரை ரூ. 21 வசூலிக்கப்பட்டு வருகிறது.
- மே 1, 2025 ஆம் தேதி முதல் இது ரூ. 23 ஆக விலை உயரப்போகிறது. - ஒவ்வொரு கூடுதல் பரிவர்த்தனைக்கு இனி 2 ரூபாய் கூடுதலாக நீங்கள் வழங்க வேண்டும்.
3. மெட்ரோ நகரங்களில் பிற வங்கி ஏடிஎம் சேவை (Other Bank ATM In Metro Cities):
- இங்கு 1 மாதத்திற்கு 3 இலவச பரிவர்த்தனைகள் மட்டுமே அனுமதிக்கப்படுகிறது.
- கூடுதல் பரிவர்த்தனைக்கு இப்போது வரை ரூ. 21 வசூலிக்கப்பட்டு வருகிறது.
- மே 1, 2025 ஆம் தேதி முதல் இது ரூ. 25 ஆக விலை உயரப்போகிறது.
- ஒவ்வொரு கூடுதல் பரிவர்த்தனைக்கு நீங்கள் இனி 4 ரூபாய் கூடுதலாக தர வேண்டும்.
4. மெட்ரோ அல்லாத நகரங்களில் பிற வங்கி ஏடிஎம் சேவை (Other Bank ATM In Non-Metro Cities):
- இங்கு 1 மாதத்திற்கு 5 இலவச பரிவர்த்தனைகள் அனுமதிக்கப்படுகிறது.
- கூடுதல் பரிவர்த்தனைக்கு இப்போது வரை ரூ. 21 என்ற கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது.
- மே 1, 2025 ஆம் தேதி முதல் இது ரூ. 23 ஆக உயரப்போகிறது.
- ஒவ்வொரு கூடுதல் பரிவர்த்தனைக்கு நீங்கள் இனி 2 ரூபாய் கூடுதலாக வழங்க வேண்டும்.
5. நிதி அல்லாத ATM பரிவர்த்தனை (Non-Financial ATM Transactions):
- இந்த சேவைக்கு 5 இலவச பரிவர்த்தனைகள் அனுமதிக்கப்பட்டுள்ளன.
- இதுவரை எந்தவொரு கட்டணமும் வசூலிக்கப்பட்டதில்லை.
- மே 1, 2025 ஆம் தேதி முதல் மேற்கொள்ளப்படும் ஒவ்வொரு நிதி அல்லாத ATM பரிவர்த்தனைக்கு ரூ. 5 வசூலிக்கப்படும்.
6. சர்வதேச ஏடிஎம் வித்ட்ரா சேவை (International ATM Withdrawals):
- இலவச பரிவதனைகள் எதுவும் கிடையாது - இதற்கு முன்பு வரை ஒவ்வொரு கட்டணத்திற்கு ரூ. 125 முதல் ரூ. 150 வசூலிக்கப்பட்டு வந்தது.
- மே 1, 2025 முதல் ரூ. 150 முதல் ரூ. 200 வரை வசூலிக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.
7. நிராகரிக்கப்பட்ட பரிவர்த்தனைகள் (Declined Transactions or Insufficient Funds):
- வங்கி கணக்கில் போதுமான நிதி இல்லை என்றால் ATM சேவை பயன்படுத்தியதற்கு ரூ. 20 வசூலிக்கப்பட்டு வந்தது.
- மே 1, 2025 முதல் இது ரூ. 25 ஆக வசூலிக்கப்படும்.
- இனி ATM சேவையை நீங்கள் பயன்படுத்தி பணம் வரவில்லை என்றால் இனி 5 ரூபாய் கூடுதலாக செலுத்த வேண்டும் மக்களே.
உங்கள் கணக்கில் பணமில்லை என்றால் கூட, இனி அதை ATM சேவை மூலம் நீங்கள் தெரிந்துகொண்ட காரணத்திற்காக ரூ. 25 கட்டணமாக செலுத்த வேண்டும் என்பது வேதனை தரக்கூடிய ஒரு விஷயமாக இருக்கப்போகிறது. இனி பொதுமக்கள் ATM சேவையை பயன்படுத்த வேண்டுமென்றால், சரியாக திட்டமிட்டு பயன்படுத்து வேண்டும். இல்லையென்றால், கட்டாயம் கூடுதல் கட்டணங்களில் இருந்து தப்பிக்க முடியாது.