1. Home
  2. தமிழ்நாடு

மினிமம் பேலன்ஸ் இனி 50,000 ரூபாய் இருக்கனும்..! வாடிக்கையாளர்களுக்கு ஷாக் கொடுத்த பிரபல வங்கி..!

1

ஆகஸ்ட் 1, 2025 முதல் ஐசிஐசிஐ வங்கியில் குறைந்தபட்ச இருப்புத் தொகை அதிகரிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், உள்நாட்டு வங்கிகளிலேயே அதிகபட்ச குறைந்தபட்ச இருப்புத் தொகையை நிர்ணயித்துள்ள வங்கியாக ஐசிஐசிஐ மாறியுள்ளது.

புதிய விதிமுறைகளின் விவரங்கள்:

மெட்ரோ மற்றும் நகர்ப்புறங்கள்: இதற்கு முன்பு ₹10,000 ஆக இருந்த குறைந்தபட்ச இருப்புத்தொகை, தற்போது ₹50,000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. 

நகர்ப்புறங்கள்: இதற்கு முன்பு ₹5,000 ஆக இருந்த இருப்புத்தொகை, தற்போது ₹25,000 ஆக அதிகரித்துள்ளது.

கிராமப்புறங்கள்: இதற்கு முன்பு ₹2,500 ஆக இருந்த இருப்புத்தொகை, தற்போது ₹10,000 ஆக உயர்ந்துள்ளது.

பெரும்பாலான உள்நாட்டு வங்கிகள், ₹2,000 முதல் ₹10,000 வரை குறைந்தபட்ச இருப்புத் தொகையை நிர்ணயத்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது இந்தியன் வங்கி, கனரா வங்கி மற்றும் பஞ்சாப் நேஷனல் வங்கி ஆகியவை ஏற்கனவே குறைந்தபட்ச இருப்புத் தொகைக்கான அபராதத்தை நிறுத்தி விட்டன.

HDFC வங்கி: மெட்ரோ மற்றும் நகர்ப்புறங்களில் ₹10,000, அரைகுறை நகர்ப்புறங்களில் ₹5,000, மற்றும் கிராமப்புறங்களில் ₹2,500 குறைந்தபட்ச இருப்புத்தொகையாக நிர்ணயித்துள்ளது.

Trending News

Latest News

You May Like