1. Home
  2. தமிழ்நாடு

நிவாரணத்தொகையை வங்கியின் மூலமாகவே வழங்கி இருக்கலாமே - சென்னை உயர்நீதிமன்றம்..!

1

தமிழகத்தில் மகளிருக்கான ரூ.1000 உரிமைத்தொகைக்கான பணம் ஒவ்வொரு மாதமும் வங்கி கணக்கின் மூலமாக வழங்கப்பட்டு வருகிறது. ஆனால், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணத்தொகை ரூ.6,000மட்டும் ரேஷன் கடைகள் மூலமாக வழங்கப்பட்டு வருகிறது. கிட்டத்தட்ட வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 37 லட்சம் குடும்பங்களுக்கு ரூ.6,000 நிவாரணம் வழங்கப்பட்டு வருகிறது. மேலும், ரேஷன் கார்டு இல்லாதவர்களுக்கும் ரூ.6,000 நிவாரணம் வழங்க ஏற்பாடு செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

வெள்ள நிவாரணத்தொகையை வங்கியின் மூலமாகவே வழங்கி இருக்கலாம் என சென்னை உயர்நீதிமன்றம் தமிழக அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது. இவ்வாறு, வங்கியின் மூலமாக பணம் வழங்கப்பட்டிருந்தால் எந்தவித சூழ்ச்சி வேலைகளும் நடைபெறாமல் பொதுமக்கள் நிவாரணத்தொகையை பெற்றிருப்பார்கள் எனவும், அதற்கான நேரமும் மிச்சமாகும் என உயர்நீதிமன்றம் அறிவித்துள்ளது. இதனால், உயர்நீதிமன்றத்தின் அறிவுரைப்படி மீதமுள்ள மக்களுக்கு நிவாரணத்தொகை வங்கியின் மூலமாக வழங்கப்படுமா என்கிற கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.

Trending News

Latest News

You May Like