1. Home
  2. தமிழ்நாடு

ஆசை வார்த்தைகூறி சிறுமியை சீரழித்த காமுகன்!

ஆசை வார்த்தைகூறி சிறுமியை சீரழித்த காமுகன்!


திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து சீரழித்த இளைஞரை காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.

பொன்னேரியை சேர்ந்த புகழேந்தி (20) என்ற இளைஞர் தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். அவரும் அதே பகுதியை சேர்ந்த 16 வயது சிறுமியும் காதலித்து வந்ததாக தெரிகிறது. இந்நிலையில் புகழேந்தி மாணவியை திருமணம் செய்து கொள்வதாக கூறி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.

இது குறித்து அறிந்தவுடன் சிறுமியின் தந்தை பொன்னேரி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் லட்சுமி வழக்கு பதிவு செய்து பள்ளி மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த வாலிபரை போக்சோ சட்டத்தில் கைது செய்தார். பின்னர் வழக்குப் பதிந்து பொன்னேரி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கிளைச் சிறையில் அடைத்தனர்.

newstm.in

Trending News

Latest News

You May Like