இளம்பெண்ணை அரிவாளால் கொடூரமாக வெட்டிக் கொன்ற லாரி டிரைவர்!

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே மூன்று பெண்களுடன் தனியே வசித்து வந்த பெண் மீது கொலைவெறி தாக்குதல் நடத்தியதில் அவர் உயிரிழந்தார்.
பெரியமொடச்சூா் பகுதியில் மேரி என்பவர் மூன்று பெண்களுடன் தனியே வசித்து வந்தார். இந்நிலையில் மேரியை அடையாளம் தெரியாத நபா் ஒருவர் கத்தியால் குத்தி கொலை வெறி தாக்குதல் நடத்தினார்.
இதனால் அப்பகுதி மக்கள் அச்சத்தில் உறைந்தனர். அருகே வசித்து வரும் கணேசன் என்பவா் தாக்குதல் பார்த்து தடுக்கச் சென்றார். அவரையும் அந்த மர்ம நபர் கத்தியால் குத்திவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றார். .
படுகாயமடைந்த இருவரும் கோபிசெட்டிபாளையம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைகாக சோ்க்கப்பட்டனர். அதனைத் தொடர்ந்து படுகாயம் அடைந்த மேரியை மேல் சிகிச்சைக்காக கோவை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி மேரி உயிரிழந்தார்.
இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் தனிப்படை அமைத்து தப்பியோடிய நபரை தேடி வந்தனர். பெண்ணை வெட்டிக் கொன்ற நபர் அந்தியூா் பா்கூா்மலைப்பகுதி திக்கையூா் மலைகிராமத்தை சோ்ந்த லாரி ஓட்டுநா் முருகன் என்பதை கண்டறிந்தனர்.
அவரை கைது செய்துள்ள போலீஸார் கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். கொலைக்கு பயன்படுத்திய இரண்டு இருசக்கர வாகனங்கள் மற்றும் அரிவாளை பறிமுதல் செய்துள்ளனர்.
newstm.in