1. Home
  2. தமிழ்நாடு

தலைமறைவான ராஜேந்திர பாலாஜி.. மேலும் 3 தனிப்படைகள் அமைத்து தேடுதல் வேட்டை நடத்தும் காவல்துறை !!

தலைமறைவான ராஜேந்திர பாலாஜி.. மேலும் 3 தனிப்படைகள் அமைத்து தேடுதல் வேட்டை நடத்தும் காவல்துறை !!


அதிமுக ஆட்சியின் போது பால்வளத்துறை அமைச்சராக இருந்தவர் ராஜேந்திர பாலாஜி. அதிமுக ஆட்சியின்போதே இவர் மீது பல்வேறு முறைகேடு புகார்கள் எழுந்தன. இந்த நிலையில், ஆவின் உள்ளிட்ட அரசின் பல்வேறு துறைகளில் வேலை வாங்கி தருவதாக கூறி சுமார் 3 கோடி ரூபாய் மோசடி செய்ததாக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த வழக்கில் ராஜேந்திரபாலாஜி தாக்கல் செய்திருந்த முன்ஜாமீன் மனுவையும் உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதனால் கைது நிச்சயம் என்றதும் கடந்த வாரம் முதல் ராஜேந்திர பாலாஜி தலைமறைவானார். இதையடுத்து இவரை பிடிப்பதற்காக காவல்துறையில் 6 தனிப்படை அமைக்கப்பட்டது. ராஜேந்திர பாலாஜியின் வீடு, உறவினர்கள் வீடு, நண்பர்கள் வீடுகளில் ஆதரவாளர்களின் வீடு என பல இடங்களில் அவரை போலீசார் தீவிரமாக தேடினர்.

தலைமறைவான ராஜேந்திர பாலாஜி.. மேலும் 3 தனிப்படைகள் அமைத்து தேடுதல் வேட்டை நடத்தும் காவல்துறை !!

பின்னர் அவருக்கு நெருக்கமானவர்களிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். அதேபோல் ராஜேந்திர பாலாஜியுடன் போனில் பேசியவர்கள் குறித்தும் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், ராஜேந்திர பாலாஜியை பிடிக்க மேலும் 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது. இந்த மூன்று தனிப்படைகளும் கேரளா, கொடைக்கானல், கோவைக்கு விரைந்துள்ளன. ராஜேந்திர பாலாஜி பெங்களுருவில் தலைமறைவாக இருப்பதாக கிடைத்த தகவலின் பேரில், அங்கு ஏற்கனவே ஒரு தனிப்படை முகாமிட்டுள்ளது.

இதன் மூலம் மோசடி புகாரில், தலைமறைவாகவுள்ள முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியை பிடிக்க இதுவரை 9 தனிப்படைகள் அமைக்கப்பட்டிருப்பதாக விருதுநகர் மாவட்ட காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. ராஜேந்திர பாலாஜியுடன் அவரது உதவியாளர்கள் முத்துப்பாண்டி, பாபுராஜ், பலராமனை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.


newstm.in


Trending News

Latest News

You May Like