1. Home
  2. தமிழ்நாடு

இனி கொல்லம் விரைவு ரயில் இந்த 4 ரயில் நிலையத்தில் நின்று செல்லும்..!

1

சென்னை எழும்பூர் – கொல்லத்துக்கு இயக்கப்படும் விரைவு ரயில் உளுந்தூர்பேட்டை ரயில் நிலையத்தில் இரவு 7.52 மணிக்கு ஒரு நிமிடம் நின்று செல்லும். மறு மார்க்கமாக, கொல்லம் – சென்னை எழும்பூர் விரைவு ரயில் உளுந்தூர்பேட்டை ரயில் நிலையத்தில் இரவு 11.03 மணிக்கு ஒரு நிமிடம் நின்று செல்லும். இந்த நிறுத்தம் அறிவிப்பு அமலுக்கு வந்துள்ளது.

சென்னை எழும்பூர் – திருச்செந்தூர் விரைவு ரயில் குத்தாலம் ரயில் நிலையத்தில் இரவு 9.02 மணிக்கு ஒரு நிமிடம் நின்று செல்லும். மறு மார்க்கமாக, திருச்செந்தூர் – சென்னை எழும்பூர் ரயில் குத்தாலத்தில் அதிகாலை 4.33 மணிக்கு ஒரு நிமிடம் நின்று செல்லும். இந்த நிறுத்தம் அறிவிப்பும் அமலுக்கு வந்துள்ளது.

மேலும், சென்னை எழும்பூர் – திருச்செந்தூருக்கு இயக்கப்படும் விரைவு ரயில், குத்தாலம் ரயில் நிலையத்தில் ஏப்ரல் 10-ம் தேதியிலிருந்து நேரம் மாற்றப்பட்டு, இரவு 9.21 மணிக்கு ஒரு நிமிடம் நின்று செல்லும்.

இதுதவிர, மயிலாடுதுறை – செங்கோட்டை விரைவு ரயில், விழுப்புரம் – திண்டுக்கல் விரைவு ரயில் ஆகிய ரயில்கள் இரு மார்க்கமாகவும் வடமதுரை ரயில் நிலையத்தில் நின்று செல்லும். மேற்கண்டவாறு தென்னக ரயில்வே விடுத்துள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Trending News

Latest News

You May Like