1. Home
  2. தமிழ்நாடு

வீட்டில் தனியாக இருந்த கல்லூரி மாணவிக்கு நடந்த பயங்கரம்... கொத்தனாருக்கு வலை !

வீட்டில் தனியாக இருந்த கல்லூரி மாணவிக்கு நடந்த பயங்கரம்... கொத்தனாருக்கு வலை !


சென்னை பூந்தமல்லி அடுத்த காட்டுப்பாக்கம் பகுதியில் சந்திரசேகர் - தனலட்சுமி தம்பதி வசித்து வருகின்றனர். இவர்களது மகள் கல்லுரி மாணவியான மீனா (20) நேற்று வீட்டில் தனியாக இருந்துள்ளார்.

இந்நிலையில், வேலைக்கு சென்ற தனலட்சுமி மகள் மீனாவை செல்போனில் தொடர்பு கொண்டார். நீண்ட நேரம் அழைத்தும், மீனா எடுக்கவில்லை என்பதால் பக்கத்து வீட்டு பெண்ணை தொடர்புகொண்டு கேட்டுள்ளார்.

இதனால் பக்கத்துவீட்டு பெண் அங்கு சென்று பார்த்தப்போது, கழுத்தில் சரமாரியாக வெட்டப்பட்டு ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். பின்னர் இது குறித்து மீனாவின் தாய்க்கு தகவல் தெரிவித்தார்.

வீட்டில் தனியாக இருந்த கல்லூரி மாணவிக்கு நடந்த பயங்கரம்... கொத்தனாருக்கு வலை !

இதனிடையே அங்கு விரைந்த போலீசார் முதற்கட்ட விசாரணையில், அப்பெண்ணின் கழுத்தில் கத்தரிக்கோலால் குத்தப்பட்டது தெரியவந்தது. பின்னர் மீனாவின் உடலை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

விசாரணையில், மீனா வீட்டில் நேற்று கட்டுமான பணிக்கு வந்த கொத்தனார் ஒருவர், வேலைக்கு கூடுதலாக ஒருவர் தேவைப்படுவதால் அவரை அழைத்து வருவதாக கூறி சென்து தெரியவந்தது. ஆனால் அவர் திரும்பி வராதது போலீசாருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது.

இதனால் அவரது வீட்டு முகவரியை கண்டுபிடித்து போலீசார் சென்று பார்த்தபோது, அவரது வீடு பூட்டிக்கிடந்தது. கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது ரத்தக்கரை படிந்த சட்டை மற்றும் ஒரு செல்போன் இருந்தது.

வீட்டில் தனியாக இருந்த கல்லூரி மாணவிக்கு நடந்த பயங்கரம்... கொத்தனாருக்கு வலை !

அந்த செல்போனை எடுத்து வந்து மீனாவின் உறவினர்களிடம் காண்பித்தபோது, அது மீனாவின் செல்போன் தான் என உறுதி செய்தனர். பின்னர் நகைக்காக இக்கொலை நடந்ததாக போலீசார் தெரிவிக்கின்றனர்.

அதாவது, வீட்டில் ஆட்கள் இல்லாத நேரத்தில் திரும்பி வந்த கொத்தனார், மீனாவிடம் நகையை பறிக்க முயன்றார். மீனா கூச்சல் போட முயன்றதால், அருகில் இருந்த கத்தரிக்கோலை எடுத்து கழுத்தில் சரமாரியாக குத்தினார். இதில் சம்பவ இடத்திலேயே மீனா உயிரிழந்தார்.

பின்னர் மீனாவின் கழுத்தில் அணிந்திருந்த 2 பவுன் நகை மற்றும் செல்போனை கொத்தனார் எடுத்துச் சென்றது தெரியவந்தது. தலைமறைவாக உள்ள அந்த கொத்தனாரை போலீசார் தேடி வருகின்றனர்.

newstm.in

Trending News

Latest News

You May Like