1. Home
  2. தமிழ்நாடு

சோகத்தின் உச்சம்..! விமானம் நொறுங்கிய இடத்தில் 2 வயது மகளின் உடலை தேடி அலையும் தொழிலாளி..!

Q

 'ஏர் இந்தியா' நிறுவனத்தின் விமானம், ஒரு நிமிடத்திற்குள்ளே, கீழே விழுந்து வெடித்தது. 600 - 800 அடி உயரமே பறந்த விமானம், மருத்துவ கல்லூரி விடுதி மீது பயங்கரமாக மோதி விபத்துக்குள்ளானது. இந்த கோர விபத்தில் ஒரேயொரு பயணி மட்டும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.

விடுதியில் மதிய உணவு சாப்பிட்டுக் கொண்டிருந்த ஐந்து மாணவர்களும் பரிதாபமாக உயிரிழந்தது, நாடு முழுவதும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. ஒட்டு மொத்தமாக 265 பேர் உயிரிழந்துள்ளனர் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

இந்நிலையில், விமானம் நொறுங்கி விழுந்ததால் மருத்துவ கல்லூரி விடுதி இடிந்து பலத்த சேதம் அடைந்தது. அதில், பல பேரை காணவில்லை என உறவினர்கள் தெரிவித்துள்ளனர். அவர்களில், மருத்துவ கல்லூரி கேண்டினில் உணவு தயாரித்து கொடுக்கும் பெண், அவரது 2 வயது பேத்தி ஆகியோரும் இடிபாடுகளில் சிக்கி இறந்தனர். அவர்களின் உடலை அடையாளம் காண முடியாமல் பெண்ணின் மகன் தவித்து வருகிறார்.

இது தொடர்பாக ரவி என்ற அந்த நபர் கூறியதாவது: நேற்று வழக்கம் போல் எங்களது பணிகளில் ஈடுபட்டோம். ஆனால், அன்றைய நாள் இயல்பானதாக இல்லை. 1 மணியளவில் மருத்துவமனை ஊழியர்களுக்கு உணவு கொடுக்க சென்று விட்டேன். திரும்பி வந்து பார்த்த போது, விமான விபத்து நடந்தது தெரியவந்தது. அங்கு தான் எனது தாயார் ஷரளா பென் தாக்கூரும், மகள் ஆதியாவும் இருந்தனர். எனது டிஎன்ஏ பரிசோதனையை கொடுத்து விட்டேன். அதன் மூலம் எனது மகள் உடலை அடையாளம் காண முடியும் என நம்புகிறேன் என தெரிவித்தார்.

Trending News

Latest News

You May Like