1. Home
  2. தமிழ்நாடு

கொடூரத்தின் உச்சம்..! சிறுமியின் தலையில் 11 இன்ச் அளவுக்கு மண்டை ஓட்டை காணவில்லை..!

1

சென்னை ஆயிரம் விளக்கில் இருக்கும் மாநகராட்சி பூங்காவில் காவலராக பணிபுரிபவர் ரகு. இவரது 5 வயது மகள் சுதா, பூங்காவில் விளையாடிக் கொண்டிருந்த போது, புகழேந்தி என்பவரின் இரண்டு ராட்வெய்லர் நாய்கள் அந்த சிறுமி மீது பாய்ந்து கடித்து குதறின. இதை தடுக்கச் சென்ற அந்த சிறுமியின் தாயார் சோனியாவையும் அந்த ராட்வெய்லர் நாய்கள் மூர்க்கத்தனமாக கடித்தன. 

இதில் கொடுமை என்னவென்றால், இதை அனைத்தையும் அந்த நாய்களின் உரிமையாளர் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார் என்பதுதான்.

 ரத்த வெள்ளத்தில் கிடந்த சுதாவையும், தாயார் சோனியாவையும் அங்கிருந்தவர்கள் ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக அவர்கள் அப்போலோ மருத்துவமனைக்கு மாற்றப்பட்டனர். இதில் சிறுமி சுதாவின் உடல்நிலை ஆபத்தான நிலையில் உள்ளதாக கூறப்படுகிறது. அந்த சிறுமியை பார்த்துவிட்டு திரும்பிய சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன், "அந்த சிறுமியின் தலையில் 11 இன்ச் அளவுக்கு மண்டை ஓட்டை காணவில்லை" எனத் தெரிவித்தார்.

இந்நிலையில், சிறுமியை கடித்த ராட்வெய்லர் நாய்களின் உரிமையாளர் புகழேந்தி அந்த நாய்களை உரிமம் இன்றி வளர்த்தது கண்டறியப்பட்டது. இதையடுத்து, அந்த இரண்டு ராட்வெய்லர் நாய்களை 7 நாட்களுக்குள் அப்புறப்படுத்த வேண்டும் என சென்னை மாநகராட்சி சார்பில் நோட்டீஸ் அனுப்பட்டுள்ளது.

Trending News

Latest News

You May Like