1. Home
  2. தமிழ்நாடு

ஆளுநரின் செயல் மக்களை அலட்சியப்படுத்தும் அவமானப்படுத்தும் செயல்..!

Q

தமிழ்நாடு சட்டப்பேரவையில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று பதிலுரை அளித்து வருகிறார்.
அப்போது சட்டப்பேரவையில் அவர், “பெரியார், அண்ணாவின் வாரிசாக எப்படி செயல்பட வேண்டுமோ, அப்படி செயல்படுகிறேன். கலைஞர் இருந்திருந்தால், திராவிட மாடல் ஆட்சியைக் கண்டு மகிழ்ந்திருப்பார். பாசிசத்தை, எதேச்சதிகாரத்தைக் கண்டு பயந்து விடாமல் தொடர்ந்து முன்னேறுவோம் ஆட்சிப் பொறுப்பேற்ற 33 மாதங்கள், முன்னேற்றமான சாதனை மாதங்களாகும்.
திராவிட மாடல் வழியில் இயங்குவதால்  வடக்கு வாழ்கிறது தெற்கு தேய்கிறது என்பது கடந்த கால நிகழ்வாகி விட்டது. வடக்கிற்கும் நிதியை வாரி வழங்குகிறது. அரசு தயாரிக்கும் உரையை அப்படியே வாசிப்பது தான் ஆளுநரின் கடமை. ஆனால், தனது அரசியல் நடவடிக்கைக்கு சட்டமன்றத்தை ஆளுநர் பயன்படுத்திக் கொண்டாரோ என்ற சந்தேகம் எழுகிறது. ஆளுநரின் செயல் மக்களை அலட்சியப்படுத்தும் அவமானப்படுத்தும் செயல்” என்றார்

Trending News

Latest News

You May Like