காமுகனால் இடைவிடாமல் சீரழிக்கப்பட்ட சிறுமி.. தாயும் உடந்தை!
காமுகனால் இடைவிடாமல் சீரழிக்கப்பட்ட சிறுமி.. தாயும் உடந்தை!

11 வயது சிறுமி ஒருவர் தாயின் கள்ளக்காதலனால் சீரழிக்கப்பட்ட நிலையில், அதற்கு அந்த தாயும் உடந்தையாக இருந்தது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
புதுக்கோட்டை கணேஷ் நகர் பகுதியில் வசித்து வந்த 11 வயது சிறுமிக்கு பழ ரசத்தில் மயக்க மருந்து கலந்து கொடுத்த நபர் ஒருவர் அந்த சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்தார்.
சூரியகலா என்ற பெண்ணுக்கும், கணேசன் என்பவருக்கும் தகாத உறவு இருந்துள்ளது. இந்நிலையில் சூரியகலாவை பார்க்க சென்ற கணேசன் பழச்சாறில் மயக்க மருந்து கலந்து கொடுத்து சூரியகலாவின் 11 வயது மகளை கெடுத்துள்ளார்.
இந்த விவகாரம் தொடர்பாக கணேசன் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். அதனைத் தொடர்ந்து சிறுமி மர்மமான முறையில் தூக்கில் தொங்கி உயிரிழந்தார். இந்த சம்பவத்தில் திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது.
அதாவது அந்த சிறுமியை கணேசனின் ஆசைக்கு இணங்க வற்புறுத்தியதோடு, தற்கொலைக்கு தூண்டியதாக சிறுமியின் தாய் சூரியகலாவையும் கணேஷ் நகர் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்திய நிலையில், இப்போது வெளியாகியுள்ள திடுக்கிடும் தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
newstm.in