பக்கவாக பிளான் பண்ணி உடன் பணியாற்றும் பெண்ணை சீரழித்த கும்பல்!

விபத்து என்று பொய் சொல்லி உடன் பணியாற்றும் பெண்ணை வரவழைத்து நாசம் செய்த கும்பலை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.
பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் மாவட்டத்தில் தனியார் நிறுவனத்தில் பணியாற்றும் பெண் ஒருவர் கணவனை பிரிந்து தனது 10 வயது மகளுடன் வசித்து வந்தார்.
இரு தினங்களுக்கு முன்பு அவருக்கு தொலைபேசி அழைப்பு வந்தது. எதிர்முனையில் பேசிய நபர், அவரது அலுவலகத்தில் பணியாற்றும் நபருக்கு விபத்து ஏற்பட்டுவிட்டது என்றும், அவர் உயிருக்கு போராடி வருவதால் உடனடியாக மருத்துவமனைக்கு வருமாறு கூறினார்.
அந்த பெண் மகளை அழைத்துக்கொண்டு பேருந்தில் புறப்பட்டார். அவருக்காக காரில் காத்திருந்த நபர் பெண்ணுக்கு மயக்க மருந்து கலந்த குளிர்பானத்தை கொடுத்தார். மயக்கமடைந்த அந்த பெண்ணை காரில் கடத்திச் சென்றார்.
ஹோட்டல் ஒன்றுக்கு சென்ற போது அங்கு ஏற்கனவே இரண்டு பேர் காத்திருந்தனர். மூவரும் சேர்ந்து அந்தப் பெண்ணை பலமுறை பாலியல் வன்கொடுமை செய்தனர். அதன்பிறகு அந்தப் பெண்ணையும், அவரது மகளையும் காரில் அழைத்துச் சென்று சாலையோரத்தில் விட்டுவிட்டு சென்றுவிட்டனர்.
அங்கிருந்து நேராக காவல்நிலையத்திற்கு சென்ற அப்பெண் தன்னை பாலியல் வன்கொடுமை செய்தவர்கள் மீது புகார் அளித்தார். இதனையடுத்து சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் மூவரையும் காவல்துறையினர் தேடி வருகின்றனர்.
newstm.in