மாறப்போகும் எதிர்காலம்..! தஞ்சாவூர் தம்பதியின் ட்ரோன் நிறுவனத்தில் முதலீடு செய்த ZOHO நிறுவனர்..!
ZOHO நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு யாளி என்னும் டிரோன் நிறுவனத்தில் முதலீடு செய்துள்ளார். கடந்த வாரம் தான் சென்னையில் கூகுள் தாய் நிறுவனமான ஆல்பபெட் -ன் டிரோன பிரிவான WING சென்னையில் டிரோன் தயாரிக்கும் திட்டத்தை அறிவித்தது. இதைத் தொடர்ந்து தற்போது ஸ்ரீதர் வேம்பு டிரோன் நிறுவனத்தில் தனது புதிய முதலீட்டை அறிவித்துள்ளார்.
ஜோஹோ கார்ப் நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு, தஞ்சாவூரைச் சேர்ந்த ட்ரோன்-டெக் ஸ்டார்ட்அப் யாலி ஏரோஸ்பேஸ் (Yali Aerospace)நிறுவனத்தில் முதலீடு செய்துள்ளார்.
தினேஷ் பாலுராஜ் மற்றும் அவரது மனைவி அனுகிரஹா ஆகியோரால் நிறுவப்பட்ட யாலி ஏரோஸ்பேஸ், மருந்துகள் மற்றும் உறுப்புகளின் போக்குவரத்து, கண்காணிப்பு மற்றும் தளவாடங்களை வழங்குவதில் கவனம் செலுத்தும் நிலையான விங் ட்ரோனை உருவாக்கியுள்ளனர்.செங்குத்தாகக் கிளம்பி இறங்கக்கூடிய பிக்சட் இறக்கை கொண்ட ட்ரோனை உருவாக்கியுள்ளனர். இந்த செங்குத்து டேக்-ஆஃப் மற்றும் தரையிறங்கும் ட்ரோன்கள் 150 கிமீ தூரம் வரை செல்லும், ஏழு கிலோ வரை சுமந்து செல்லும்.அதிகபட்சமாக மணிக்கு 155 கிமீ வேகத்தில் பறக்கும்.
தனது குழந்தைகளின் விபத்து மரணத்தால் துக்கமடைந்த ஒரு தாயைப் பார்த்த தினேஷ், இந்தியாவின் கிராமப்புறங்களில் சுகாதார வசதிகளை மேம்படுத்துவதற்காக ட்ரோன்களை உருவாக்கத் தொடங்கினார் என்று நிறுவனத்தின் இணையதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
X இல் தனது முதலீட்டை அறிவித்த ஸ்ரீதர், நிறுவனத்தைத் தொடங்க நெதர்லாந்தில் இருந்து தங்கள் சொந்த ஊரான தஞ்சாவூருக்குத் திரும்பியதாக ஸ்ரீதர் கூறினார்.தமிழ்நாட்டின் கிராமப்புறங்கள், மனப்பாங்கான பகுதிகளில், அவசர தேவையான மருத்துவ உதவிகளை அந்தப் பகுதிகளுக்குக் கொண்டு சேர்ப்பது பெரும் சவாலாக இருந்து வருகிறது. இந்தச் சவாலுக்குத் தீர்வு காணும் வகையில் யாளி ஏரோஸ்பேஸ் நிறுவனத்தின் ட்ரோன் தொழில்நுட்பம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
மேலும் இந்த ட்ரோனை வைத்து இதர பல துறையில் சேவை அளிக்கலாம், உணவு டெலிவரி முதல் ஈகாமர்ஸ் ஷாப்பிங் டெலிவரி வரை செய்ய முடியும். ஆனால் தற்போது யாளி ஏரோஸ்பேஸ் நிறுவனம் மருத்துவ உதவிகளைக் கொண்டு சேர்ப்பதில் மட்டுமே அதிகப்படியான கவனத்தைச் செலுத்தி வருவதாகத் தெரிகிறது. யாளி ஏரோஸ்பேஸ் நிறுவனம் தற்போது ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுப் பணிகளில் ஈடுபட்டு வருகிறது. எதிர்காலத்தில், செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence) மற்றும் இயந்திர கற்றல் (Machine Learning) போன்ற தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி ட்ரோன்களின் திறனை மேம்படுத்த முயற்சிகள் மேற்கொண்டு வருகின்றனர்.
We are happy to announce our investment in Yali Aerospace, a drone startup based in Tanjavur led by the husband and wife team of Dinesh Baluraj and Anugraha. They returned from the Netherlands to their home town of Tanjavur to start this.
— Sridhar Vembu (@svembu) May 28, 2024
They have built a fixed wing drone with… pic.twitter.com/A78RawTyTN