1. Home
  2. தமிழ்நாடு

சிறுவர்களுக்கு இன்று முதல் கொரோனா தடுப்பூசி!

சிறுவர்களுக்கு இன்று முதல் கொரோனா தடுப்பூசி!


சிறுவர்களுக்கான தடுப்பூசி திட்டத்தை முதலமைச்சர் மு..ஸ்டாலின் நாளை தொடங்கி வைக்கிறார்.

கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் சூழலில் சிறுவர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணி இன்று தொடங்குகிறது. இதில் 2007ஆம் ஆண்டு அல்லது அதற்கு முன்பு பிறந்த சிறுவர்கள் தடுப்பூசி போட்டுக்கொள்ள தகுதியானவர்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் 15 -18 வயதுக்குட்பட்டோர் 33.46 லட்சம் பேர் உள்ளனர். அதில், 25 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பள்ளிகளில் படிக்கின்றனர். எனவே, பள்ளிகளில் சிறப்பு தடுப்பூசி முகாம்கள் அமைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

சிறுவர்களுக்கு இன்று முதல் கொரோனா தடுப்பூசி!

பள்ளியில் வழங்கப்பட்ட அடையாள அட்டை, ஆதார் அட்டையைக் கொண்டு இணையதளத்தில் பதிவு செய்யலாம், அதே நேரத்தில் பதிவு செய்வது கட்டாயம் அல்ல என ஏற்கனவே தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், கோடம்பாக்கம் சாலை மேட்டுப்பாளையம் மாந்தோப்பில் உள்ள பெண்கள் அரசினர் மேல்நிலைப்பள்ளியில் 15 வயதிற்கு மேற்பட்ட 1,050 மாணவ- மாணவியர்களுக்கு கொரோனா தடுப்பூசி திட்டத்தை முதலமைச்சர் மு..ஸ்டாலின் இன்று துவக்கி வைக்கிறார்.

சிறுவர்களுக்கு இன்று முதல் கொரோனா தடுப்பூசி!

இதற்கான முன்னேற்பாட்டு பணிகளை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் மேற்கொண்டுள்ளனர். ஒமைக்ரான் பரவல் அதிகரித்து வருவதால், 15-18 வயதுக்கு உட்பட்ட சிறார்களுக்கு தடுப்பூசி போடப்பட உள்ளது.

newstm.in

Trending News

Latest News

You May Like