1. Home
  2. தமிழ்நாடு

களம் ரெடியா இருக்கு.. இனி மக்களை ஏமாத்த முடியாது.. போய் கலக்குங்க.. - தவெக தலைவர் விஜய்..!

1

தவெக வாக்குச்சாவடி முகவர்களுக்கான கருத்தரங்கு நடைபெற்றது. இதில் பங்கேற்ற அக்கட்சியின் தலைவர் விஜய், மக்களை ஏமாற்றி இனி ஆட்சியை பிடிக்க முடியாது என்றார். மேலும் அவர் பேசியதாவது, கோவை என்றாலும் கொங்கு பகுதி என்றாலும் இந்த மண்ணின் மரியாதைதான் நினைவுக்கு வரும். இது பூத் ஏஜென்டுகளுக்கான பயிற்சி பட்டறை போல் தெரியவில்லை.

அதைவிட பெரிய விழா போல் தெரிகிறது. நம் ஆட்சிக்கு வர வேண்டும் என்று நினைக்கவில்லை. நம் மக்கள் நலனுக்காகதான் ஆட்சிக்கு வரவேண்டும் என நினைக்கிறோம். இந்த பயிற்சி பட்டறை கூட்டம் வாக்கு ஒன்றிற்காக மட்டுமே நடக்கும் கூட்டம் இதுவல்ல. மக்களோடு எப்படி இணைந்து இருக்க போகிறோம்? மக்களோடு மக்களாக எப்படி ஒன்றிணைந்து இருக்க போகிறோம் என்பது குறித்து ஆலோசிப்பதற்காக தான் இந்த பயிற்சி பட்டறை..

இதற்கு முன்பு பலர் வந்திருக்கலாம் போயிருக்கலாம். நிறைய பொய்களை சொல்லி இருக்கலாம். மக்களை ஏமாற்றி இருக்கலாம். இதையெல்லாம் செய்து ஆட்சியைப் பிடித்திருக்கலாம். அதைப் பற்றி பேச நான் இங்கு வரவில்லை. இனி அதெல்லாம் நடக்காது. நடக்க விடப் போறதும் இல்லை. ஆட்சிக்கு வரவேண்டும் என நாம் நினைப்பது மக்களுக்காக தான்.


மக்களிடம் நாம் எப்படி ஓட்டுக்களை வாங்க போகிறோம் என்பதை பற்றி மட்டுமே பேச போகும் கூட்டம் இது கிடையாது. அதையும் தாண்டி மக்களுடன் நாம் எப்படி ஒன்றிணைந்து இருக்கப் போகிறோம் என்பதுதான் மிகவும் முக்கியம். அதைப்பற்றி பேசுவதற்காக மட்டுமே இந்த பயிற்சி பட்டறை. நம்முடைய கட்சியின் மேல் மக்களுக்கு நம்பிக்கையை கொண்டு வரப் போவதே, பூத் லெவல் ஏஜென்டுகளான நீங்கள்தான்.


நீங்கள் ஒவ்வொருவரும் ஒரு போர் வீரனுக்கு சமம். நாம் ஏன் வந்திருக்கிறோம்? எதுக்கு வந்திருக்கிறோம்? எப்படிப்பட்ட ஆட்சி அமைக்க போகிறோம்? என்பதை மக்களிடம் கொண்டு போய் சொல்ல வேண்டும். கண்டிப்பாக மக்கள் கேட்பார்கள், உங்களுக்கு என்ன அரசியல் அனுபவம் இருக்கு என்று கேட்பார்கள்? ஆனால் நீங்கள் யார், நீங்கள் எப்படிப்பட்டவர்கள் உங்களுடைய கெப்பாசிட்டி என்ன என்பது எனக்கு தெரியும்.


நம்ம கிட்ட என்ன இல்ல? மனசுல நேர்மை இருக்கு. கரை படியாத அரசியல் செய்ய வேண்டும் என்ற நம்பிக்கை இருக்கு. பேச உண்மை இருக்கு. செயல்படுத்த திறமை இருக்கு. அர்ப்பணிப்புகளும் இருக்கு. களம் ரெடியா இருக்கு. இதுக்கு மேல என்ன வேணும்.. போய் கலக்குங்க கான்ஃபிடன்ட்டா இருங்க.. வெற்றி நிச்சயம்.. இவ்வாறு விஜய் தவெக பூத் கமிட்டி கருத்தரங்கில் பேசினார்.

Trending News

Latest News

You May Like