விவசாயி சின்னம் உறுதியானது... சீமான் அறிவிப்பு..!

மைக் சின்னத்தில் போட்டியிட்ட நாம் தமிழர் கட்சி, பெரிதும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் 8.22 சதவீத வாக்குகளைக் குவித்து அங்கீரிக்கப்பட்ட கட்சியாக உருவெடுத்தது. அதன்பின்னர் ஈரோடு இடைத்தேர்தலில் அங்கீகரிக்கப்பட்ட கட்சியாக தேர்தல் களம் பூண்டது.
இந்த நிலையில், நாம் தமிழர் கட்சிக்கு விவசாயி சின்னத்தை ஒதுக்கீடு செய்து தலைமைத் தேர்தல் ஆணையம் அறிவிக்கை வெளியிட்டிருக்கிறது. இந்தத் தகவலை அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் எக்ஸ் பக்கத்தில் உறுதிப்படுத்தினார்.
மாநிலக் கட்சியாக அங்கீகரிக்கப்பட்ட
— செந்தமிழன் சீமான் (@Seeman4TN) May 10, 2025
நாம் தமிழர் கட்சிக்கு #விவசாயி சின்னத்தை இந்தியத் தேர்தல் ஆணையம் ஒதுக்கீடு செய்து 10-05-2025 அன்று அறிவித்துள்ளது. pic.twitter.com/RcXENokAz5