1. Home
  2. தமிழ்நாடு

வாடிக்கையாளர் அதிர்ச்சி..! அமேசானில் ஆர்டர் செய்த பார்சலுக்குள் பாம்பு..!

1

ஆன்லைன் மூலம் பொருட்களை வாங்குபவர்களுக்கு, அதிர்ச்சி அளிக்கும் பல நிகழ்வுகள் ஆங்காங்கே நடந்து வருகிறது. மொபைல் போன் ஆர்டர் செய்பவர்களுக்கு செங்கல், பழங்கள், சோப்பு டப்பா வந்து அதிர்ச்சி கொடுத்துள்ளன. ஒரு சிலருக்கு ஆர்டர் கொடுத்தும் பொருட்கள் வராமல் இருந்துள்ளது.

அந்த வகையில், பெங்களூருவில் பெண் ஒருவருக்கு அதிர்ச்சி ஏற்படுத்தும் சம்பவம் நடந்துள்ளது. ஷார்ஜாபூர் பகுதியில் வசிக்கும் பெண் ஒருவர் ஆன்லைன் மூலம் விளையாட்டு கருவியை ஆர்டர் செய்துள்ளார். குறிப்பிட்ட நாளில் பார்சல் வந்துள்ளது. ஆர்டர் செய்தது வந்துவிட்டதாக மகிழ்ச்சியில் அந்த பெண் பார்சலை பிரித்து பார்த்தார். அப்போது பாம்பு ஒன்று வெளியே வந்தது. பார்சலில் டேப் ஒட்டப்பட்டு இருந்ததால், பாம்பு முழுமையாக வெளியே வர முடியவில்லை. இந்த பாம்பு அதிக விஷம் கொண்ட வகையைச் சேர்ந்தது. இதனை பிடித்து மக்கள் நடமாட்டம் இல்லாத இடத்தில் விடப்பட்டது.

பார்சலில் பாம்பு வந்ததை பார்த்து அந்த பெண் முதலில் அதிர்ச்சி அடைந்தாலும், பிறகு தைரியத்தை வரவழைத்து கொண்டு, அதனை வீடியோவாக பதிவு செய்தார். 

இந்நிலையில் பாதிக்கப்பட்ட தம்பதி உரிய வீடியோ ஆதாரத்துடன் அமேசான் நிறுவனத்தின் சமூக வலைத்தள பக்கத்தில் முறையிட்டனர். இதை அடுத்து, மன்னிப்பு கோரிய அமேசான் நிறுவனம், அவர்கள் செலுத்திய முழு தொகையையும் திரும்ப அளித்தது. ஆன்லைனில் ஆர்டர் செய்த Xbox Gaming கண்ட்ரோலரில் பாம்பு இருந்து சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


 

Trending News

Latest News

You May Like