1. Home
  2. தமிழ்நாடு

குழந்தையை கொன்று மூட்டையாக கட்டி அலமாரியில் வைத்த கொடூரம்!

குழந்தையை கொன்று மூட்டையாக கட்டி அலமாரியில் வைத்த கொடூரம்!


குடும்ப சண்டை காரணமாக தங்களது அண்ணனின் குழந்தையை கொன்ற இரண்டு பெண்கள் துணியில் சுருட்டி அலமாரியில் வைத்த கொடூரம் நிகழ்ந்துள்ளது.

உத்தரபிரதேச மாநிலம் கிரேட்டர் நொய்டாவில் சகோதரிகள் இரண்டு பேர் தனது அண்ணனுடன் வசித்து வந்தனர். பிங்கி, ரிங்கி என்ற சகோதரிகள் இருவரும் மிகவும் பாசத்துடன் தன் அண்ணனிடம் பழகி வந்தனர்.

இந்நிலையில் அண்ணனுக்கு சப்னா என்ற பெண்ணோடு திருமணம் நடந்தது. திருமணத்திற்கு பிறகு தனது தங்கைகளின் நடவடிக்கை மாறியதால் அண்ணன் மிகவும் மனக்கஷ்டம் அடைந்தார். ஒரு கட்டத்தில் இரண்டு தங்கைகளையும் வெறுத்தார்.

மேலும் மனைவிக்கு முன்பே அவர்களை கேவலப்படுத்தி பேசியுள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த ரிங்கி, பிங்கி ஆகிய இருவரும் அண்ணனின் குழந்தையை கொலை செய்தனர்.

பின்னர் குழந்தையின் உடலை ஒரு போர்வையில் மூடி, அதை தங்கள் வீட்டிற்குள் ஒரு அலமாரிக்குள் மறைத்து வைத்தனர்.

குழந்தையை காணவில்லை என்று அவரின் தாயார் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் விசாரணையை தொடங்கினர். அப்போது அந்த குழந்தையை அவர்கள் அத்தைகளே கொன்றது தெரியவந்தது. வழக்கு பதிவு செய்த போலீஸார் குழந்தையின் அத்தைகள் இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

newstm.in

Trending News

Latest News

You May Like