அதிர்ச்சியில் சாமானிய மக்கள்..! அரிசி விலை திடீர் உயர்வு ..!

தமிழகத்தை பொறுத்தவரை தஞ்சை, நாகை மயிலாடுதுறை, திருவாரூர் உள்ளிட்ட மாவட்டங்களில் நெல் அதிக அளவு பயிரிடப்படுகிறது. நடப்பாண்டு காவிரி அணையில் இருந்து போதிய அளவு நீர் கிடைக்காததால் குறுவை சாகுபடி மகசூல் வெகுவாக குறைந்துள்ளது. அதோடு கர்நாடகாவில் இருந்து டெல்டா மாவட்டங்களுக்கு வரும் அரிசி மூடைகளின் எண்ணிக்கையும் சரிந்துள்ளது.
இதன் விளைவாக கர்நாடக பொன்னி, மைசூர் பொன்னி போன்ற அரசியின் விலை கிலோ ஒன்றுக்கு ரூ. 4 வீதம் ஒரு மூட்டைக்கு ரூ. 100 வரை அதிகரித்துள்ளது. இது குறித்து பேசிய அரிசி வியாபாரிகள் தற்போதைய நிலை தொடர்ந்தால் அரிசியின் விலை மேலும் உயர வாய்ப்புள்ளதாக கூறுகின்றனர். கடந்த ஆறு மாதங்களில் மட்டும் ரூ. 35 க்கு விற்கப்பட்ட அரிசிகள் தற்போது 50 க்கு விற்பனை ஆகிறது. இதனால் சாமானிய மக்கள் பெரிதும் பாதிப்புக்கு உள்ளாகிவுள்ளதாக கூறுகின்றனர்.