1. Home
  2. தமிழ்நாடு

புதியதாக உருவாகும் கீழடி அருங்காட்சியகத்திற்கு அடிக்கல் நாட்டினார் முதல்வர்

புதியதாக உருவாகும் கீழடி அருங்காட்சியகத்திற்கு அடிக்கல் நாட்டினார் முதல்வர்


கீழடியில் 12 கோடியே 25 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் உருவாகும் அருங்காட்சியகத்திற்கு, தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி காணொலி மூலம் அடிக்கல் நாட்டினார்.

சிவகங்கை மாவட்டம் கீழடி ஊராட்சியில் தற்போது, 6-வது கட்ட அகழாய்வு பணிகள் நடைபெற்று வருகின்றன.ஏற்கனவே இப்பகுதியில் நடந்து முடிந்த அகழாய்வுகளில் கிடைக்கப் பெற்ற குவளை, முதுமக்கள் தாழிகள், ஓடுகள், பானைகள், வளையல்கள், எலும்புக்கூடுகள், செங்கல் சுவர் உள்ளிட்டவைகளை உலகறிய செய்யும் வகையில் அங்கு அருங்காட்சியகம் அமைக்க வேண்டும் என தமிழ் ஆர்வலர்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்து வந்தனர்.

இதனையடுத்து 12 கோடியே 25 லட்சம் ரூபாய் செலவில் சர்வதேச தரத்தில் அருங்காட்சியகம் நிறுவப்படவுள்ளது. புதிய அருங்காட்சியகத்திற்கு காணொலிக்காட்சி மூலம் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அடிக்கல் நாட்டினார்.

newstm.in

Trending News

Latest News

You May Like