1. Home
  2. தமிழ்நாடு

இன்று முதல் அமலுக்கு வரும் மாற்றங்கள்.. என்னன்னு பாருங்க!

1

SBI கிரெடிட் கார்டு விதிமுறைகளில் மாற்றம்: பல வங்கிகள் தங்கள் கிரெடிட் கார்டு விதிமுறைகளை மாற்றியுள்ளன. அவற்றில் ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா முதன்மையானது. பொதுத்துறையில் மிகப்பெரிய வங்கியாக இருக்கும் எஸ்பிஐ வாடிக்கையாளர்கள் இனி கிரெடிட் கார்ட் மூலம் வாடகை செலுத்தும் பரிவர்த்தனைகளில் ரிவார்டு புள்ளிகள் வழங்கப்பட மாட்டாது. இந்த விதி மாற்றம் குறிப்பிட்ட கிரெடிட் கார்டுகளுக்கு மட்டுமே பொருந்தும் என்பதையும், ஏப்ரல் 1, 2024 முதல் அமலுக்கு வரும் என்பதையும் கவனிக்க வேண்டும். இந்த மாற்றம் எஸ்.பி.ஐ கார்டு எலைட், எஸ்.பி.ஐ கார்டு எலைட் அட்வாண்டேஜ், எஸ்.பி.ஐ கார்டு பல்ஸ் மற்றும் சிம்பிளி கிளிக் எஸ்.பி.ஐ கார்டு போன்ற கிரெடிட் கார்டுகளுக்கு பொருந்தும்.

ஐசிஐசிஐ வங்கி கிரெடிட் கார்டுகள்: இந்தியாவின் இரண்டாவது பெரிய தனியார் வங்கி விமான நிலைய லவுஞ்ச் அணுகல் தொடர்பாக புதிய விதிகளை கொண்டு வருகிறது. ஏப்ரல் 1 முதல் (Q1FY25) தொடங்கும் காலாண்டில் குறைந்தபட்சம் ரூ.35,000 செலவழித்தால் மட்டுமே வாடிக்கையாளர்கள் அடுத்த காலாண்டில் அதாவது Q2FY25க்கான இலவச லண்டன் வருகைக்கான வாய்ப்பைப் பெறுவார்கள்.

யெஸ் பேங்க் கிரெடிட் கார்டுகள்: லவுஞ்ச் அணுகல் தொடர்பாக யெஸ் வங்கியும் புதிய விதியைக் கொண்டுள்ளது. யெஸ் பேங்க் கிரெடிட் கார்டு வைத்திருப்பவர்கள் குறைந்தபட்சம் ரூ. 10,000 அல்லது அதற்கு மேல் செலவழித்தால் மட்டுமே, அடுத்த காலாண்டில் ஓய்வறை அணுக அனுமதிக்கப்படுவார்கள்.

ஓலா மணி வாலட் மாற்றம் : புதிய நிதியாண்டில் ஓலா மணி வாடிக்கையாளர்களுக்கு முக்கிய செய்தி! ஓலா மணி நிறுவனம் தங்கள் வாடிக்கையாளர்களுக்கு SMS மூலம் தகவல் ஒன்றை அனுப்பியுள்ளது. அதன்படி, நிறுவனம் தனது கணக்குகளை "சிறு வாலட்" (Small PPI) ஆக மாற்ற இருப்பதாக தெரிவித்துள்ளது. இதன் காரணமாக, ஏப்ரல் 1, 2024 முதல் ஓலா மணி வாலட்டில் பணம் ஏற்றுவதற்கு புதிய கட்டுப்பாடுகள் அமலுக்கு வரும்.புதிய விதிமுறைகளின்படி, ஒரு மாதத்திற்கு ரூ.10,000 மட்டுமே ஓலா மணி வாலட்டில் பணம் ஏற்ற முடியும். முன்னதாக, இந்த வரம்பு அதிகமாக இருந்தது.

அதிக தொகையை ஓலா கேப் (Ola Cab) சவாரிகளுக்காக அல்லது பிற ஆன்லைன் கட்டணங்களுக்காக ஓலா மணி வாலட்டை பயன்படுத்தி வந்த வாடிக்கையாளர்கள் இதனால் பாதிக்கப்படுவார்கள்.

இன்று முதல் பான்-ஆதாரை தாமதமாக இணைத்தால் ரூ.1,000 அபராதமும் விதிக்கப்படும். வருமான வரித்துறையானது (Income Tax Department), பான் கார்டு வைத்து இருக்கும் அனைவருமே (விலக்கு பிரிவின் கீழ் வருபவர்களை தவிர) தங்கள் பான் மற்றும் ஆதாரை இணைப்பதை கட்டாயமாக்கி உள்ளதும் இங்கே குறிப்பிடத்தக்கது. பிரிவு 139ஏஏ-யின் கீழ் பான் எண்ணை ஆதாருடன் இணைப்பது கட்டாயமாகும்.

புதிய தேசிய ஓய்வூதியத் திட்ட விதி:

தேசிய ஓய்வூதியத் திட்டத்திற்கான பாதுகாப்பு விதிகள் மாற்றப்பட்டுள்ளன. இதில், நாம் இரண்டு அடுக்கு பாதுகாப்பு வழிமுறைகளைப் பின்பற்ற வேண்டும். அதாவது, முன்பு போல் கடவுச் சொல்லை மட்டும் நிரப்பி உள்நுழைய முடியாது. எனவே, உங்களது கணக்கிற்கான அணுகல் வேறு ஒருவரின் கைகளுக்கு எளிதில் சென்றுவிடாது.

நீங்கள் ஆதார் எண்ணைச் சரிபார்க்க வேண்டும். உங்கள் மொபைலுக்கு அனுப்பப்பட்ட ஓடிபி-ஐ பயன்படுத்த வேண்டும். பின்னர்தான் உங்கள் கணக்கு விவரங்களைப் பார்க்க முடியும்.

Trending News

Latest News

You May Like