அடுத்த 2 நாட்களில் மழைக்கு வாய்ப்பு !! வானிலை ஆய்வு மையம்
வங்கக்கடலில் புதியு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் கூறி இருந்தது. அதன்படி மத்திய கிழக்கு மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நிலவுகிறது.
அதன் காரணமாக, மத்திய, தெற்கு மற்றும் தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் மணிக்கு 40 -50 கிலோமீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசும். இதே போன்று வட தமிழக மற்றும் ஆந்திர கடலோர பகுதிகளிலும் மணிக்கு 40 -50 கிலோமீட்டர் வேகத்தில் சூறைக்காற்று வீசும்.
எனவே, குறிப்பிட்ட பகுதிகளுக்கு மீனவர்கள் நாளை மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்றும் வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தி உள்ளது. தென்மேற்கு பருவக்காற்றின் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பெரும்பாலான மாவட்டங்களின் ஒருசில இடங்களில், அடுத்த இரண்டு நாட்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் கூறி உள்ளது.
Newstm.in