1. Home
  2. தமிழ்நாடு

நாளை நடைபெற இருந்த அ.தி.மு.க. பொதுக்கூட்டம் வரும் 16-ம் தேதிக்கு ஒத்திவைப்பு..!

1

அ.தி.மு.க. தலைமை வெளியிட்டுள்ள அறிக்கையில், 

அ.தி.மு.க.வின் 52-வது ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு, பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி 4.11.2023 அன்று தஞ்சை மாநகரில் நடைபெற இருந்த பொதுக்கூட்டத்தில் பங்கேற்பார் என ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்தது.

தற்போது, டெல்டா மாவட்டங்களில் அடிக்கடி மழை பெய்து வருவதாலும், கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தி இருப்பதாலும், 4.11.2023 அன்று நடைபெற இருந்த பொதுக்கூட்டம் ஒத்திவைக்கப்பட்டு, 16.11.2023 – வியாழக் கிழமை மாலை 5 மணியளவில், தஞ்சை மாநகரில் நடைபெற உள்ள பொதுக்கூட்டத்தில், அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி பங்கேற்று சிறப்புப் பேருரை ஆற்ற உள்ளார் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறோம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 


 

Trending News

Latest News

You May Like