1. Home
  2. தமிழ்நாடு

குடி போதையில் பிரபல நடிகையிடம் எல்லை மீறிய நடிகர்!

குடி போதையில் பிரபல நடிகையிடம் எல்லை மீறிய நடிகர்!


கிராமத்து இயக்குநர் என்று பெயர் எடுத்தவரின் படத்தில் அறிமுகமான அந்த நடிகை பெரும்பாலான ரசிகர்களின் கனவுக்கன்னி. தமிழ் சினிமாவில் ஒரு ரவுண்ட் வந்த அவர் பின்னர் பாலிவுட்டிக்கு சென்றுவிட்டார். அங்கேயே செட்டிலாகி தயாரிப்பாளர் ஒருவரை திருமணம் செய்து கொண்டார். அந்த நடிகை முதல் முதலில் பாலிவுட்டில் அறிமுகமான போது படப்பிடிப்புக்கு சென்று வர ஏதுவாக ஒரு ஹோட்டலில் தங்கியுள்ளார். அதே ஓட்டலில் அந்த பாலிவுட் ஹீரோவும் தங்கியிருக்கிறார். முதல் நாள் ஷூட்டிங் கூட ஆரம்பிக்காத நிலையில், அந்த ஹீரோ செம போதையில், நடிகையின் அறைக்கு சென்று அந்த நடிகையிடம் எல்லை மீறி நடந்து கொண்டுள்ளார். 

இதனால் பதற்றமடைந்த நாயகி ஹோட்டல் அறையை விட்டு இரவோடு இரவாக ஓடிவிட்டார். அந்த பாலிவுட் நடிகர் சமீபத்தில் சிறைக்கு சென்ற வந்தவர். தற்போது கன்னட படம் ஒன்றில் கூட வில்லனாக நடித்து வருகிறார். இந்த விஷயம் தற்போது தான் வெளியே தெரியவந்துள்ளது. அந்த நடிகை தற்போது இறந்துவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. 

newstm.in

Trending News

Latest News

You May Like