இங்குள்ள அத்தனை பேரையும் குடிகாரர்களாக மாற்றியதுதான் திமுக அரசின் சாதனை - பிரேமலதா விஜயகாந்த்..!
கள்ளக்குறிச்சி, கருணாபுரத்தில் கள்ளச்சாராயம் அருந்தி சுமார் 60 பேர் வரை உயிரிழந்துள்ளனர். மேலும் நூற்றுக்கும் மேற்பட்டோர் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்நிலையில் கள்ளச்சாராய விவகாரத்தில் திமுக அரசின் மெத்தனப் போக்கே இத்தனை உயிர்கள் பலியானதற்கு காரணம் எனவும், இதற்கு பொறுப்பேற்று முதல்வர் மு.க.ஸ்டாலின் ராஜினாமா செய்ய வேண்டும் என அதிமுக தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.கள்ளச்சாராய விவகாரத்தை கண்டித்து மாநிலம் முழுவதும் நேற்று அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டமும் நடைபெற்றது. இந்நிலையில், கள்ளச்சாராய சம்பவத்தில் ஆளும் திமுக அரசின் மெத்தனப் போக்கை கண்டித்து கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே, தேமுதிக சார்பில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில் அக்கட்சியின் பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் பங்கேற்று பேசுகையில், “கடந்த 30, 40 ஆண்டுகளாக இங்குள்ள கல்வராயன்மலையில் கள்ளச்சாராயம் காய்ச்சி இங்குள்ள அத்தனை பேரையும் குடிகாரர்களாக மாற்றியதுதான் திமுக அரசின் சாதனையே ஒழிய வேறு ஒரு சாதனையுமில்லை.