1. Home
  2. தமிழ்நாடு

இந்தியா கூட்டணியின் 3-வது கூட்டம் மும்பையில் நடக்கிறது..! லோகோவும் வெளியிடப்படுகிறது..!

1

பாராளுமன்ற தேர்தலில் பா.ஜ.க.வுக்கு எதிராக எதிர்கட்சிகளை ஒருங்கிணைக்கும் முயற்சியில் பீகார் முதல்வரும்,  ஐக்கிய ஜனதாதள தலைவருமான நிதிஷ்குமார் ஈடுபட்டார். அந்த வகையில் எதிர்க்கட்சிகளின் முதல் கூட்டம் பீகார் தலைநகர் பாட்னாவில் கடந்த ஜூன் 23-ம்  தேதி நடைபெற்றது. இதில் 17 கட்சிகள் பங்கேற்றன. அதை தொடர்ந்து எதிர்க்கட்சிகளின் 2-வது கூட்டம் பெங்களூரில் கடந்த மாதம் 17 மற்றும் 18-ம்தேதிகளில் நடந்தது. இந்த கூட்டத்தில் தான் எதிர்க்கட்சிகள் அணிக்கு இந்தியா கூட்டணி என்று பெயரிடப்பட்டது. இந்த கூட்டத்தில் 26 கட்சிகள் பங்கேற்றன. 

இந்த நிலையில் எதிர்க்கட்சி அணியான இந்தியா கூட்டணியின் 3-வது கூட்டம் மும்பையில் வரும் 31 மற்றும் செப்டம்பர் 1-ம் தேதி ஆகிய 2 தினங்களில் நடக்கிறது. இந்த கூட்டத்துக்கான ஏற்பாடுகளை மகா விகாஸ் அகாதி கூட்டணியில இடம் பெற்றுள்ள காங்கிரஸ், உத்தவ் தாக்கரே சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் கட்சியினர் செய்து வருகின்றனர். இந்த கூட்டத்தில் எதிர்க்கட்சிகள் தங்குவதற்கு 175 ஓட்டல் அறைகள் முன்பதிவு செய்யப்பட்டுள்ளன. 

மேலும் இந்த கூட்டத்தில் முக்கிய கட்சிகளின் உறுப்பினர்களை உள்ளடக்கிய  11 பேர் கொண்ட ஒருங்கிணைப்பு குழு இறுதி செய்யப்படும் என்றும், பா.ஜ.க.வுக்கு சவாலாக இருக்கும் தொகுதிகளை ஆராய்ந்து தேவையான நடவடிக்கைகளை எடுக்கும் என்றும் கூறப்படுகிறது.  

மேலும் இந்த கூட்டத்தில் லோகோ வெளியிடப்படும் என்று மகராஷ்டிரா முன்னாள் முதல்வரும்,  அம்மாநில மூத்த காங்கிரஸ் தலைவருமான அசோக் சவான் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறுகையில், 

மும்பையில் நடைபெறும் எதிர்க்கட்சிகள் கூட்டத்தில் நாங்கள் ஒரு பொதுவான லோகோவை உருவாக்க முடிவு செய்துள்ளோம். வருகிற 31-ம் தேதி லோகோ வெளியிடப்படும் என்று கூறினார். 

Trending News

Latest News

You May Like