இதுக்கு பேருதான் அவன் பொருள எடுத்து அவனையே போடுறதா..? உதயநிதியை சீண்டிய எடப்பாடி பழனிசாமி..!
![1](https://newstm.in/static/c1e/client/106785/uploaded/67fc8400824a56b161c2bcf9a991302e.png?width=836&height=470&resizemode=4)
திண்டுக்கலில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சிபிஎம் வேட்பாளர் சச்சிதானந்தத்தை ஆதரித்து கடந்த மார்ச் 24-ம் தேதி பரப்புரை மேற்கொண்டார். அப்போது மதுரை ஏய்ம்ஸ் மருத்துவமனை அடிக்கல் நாட்டு விழாவின் போது வைக்கப்பட்ட செங்கல்லை காண்பித்து உதயநிதி தனது வழக்கமான ஸ்டைலில் பிரச்சாரம் செய்து அப்பகுதி மக்களிடம் வாக்குகள் சேகரித்தார்.
உதயநிதியின் இந்த செங்கல் பிரச்சாரத்தை மாற்ற வேண்டும் எனவும், ஒரே ஸ்க்ரிப்ட்டாக இருப்பதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்தார். இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக காஞ்சிபுரத்தில் திமுக வேட்பாளர் செல்வத்தை ஆதரித்து பிரச்சாரத்தில் ஈடுபட்ட போது அமைச்சர் உதயநிநி ”நான் ஆச்சு கல்லை தான் காட்டினேன், அவர்(எடப்பாடி பழனிசாமி) பல்லை காட்டுகிறார் என எய்ம்ஸ் அடிக்கல் நாட்டு விழாவில் பிரதமர் மோடியுடன் எடப்பாடி பழனிசாமி இருக்கும் புகைப்படத்தை காண்பித்து கூட்டத்தில் கடுமையாக விமர்சித்தார்.
நேற்று தூத்துக்குடியில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற்ற வேட்பாளர் அறிமுக கூட்டத்தில் அதிமுக சார்பில் போட்டியிடும் சிவசாமி வேலுமணியை ஆதரித்து இ.பி.எஸ் வாக்குகள் சேகரித்தார். கூட்டத்தில் தொடர்ந்து பேசிய எடப்பாடி பழனிசாமி, “பாஜகவுடன் கள்ளக்கூட்டணி வைத்திருப்பது திமுக தான் என கடுமையாக விமர்சித்தார்.
மேலும், ”அதிமுக யாருக்கும் மறைமுகமாக ஆதரவு கொடுக்காது. மத்தியிலும், மாநிலத்திலும் ஆட்சியில் அமர்ந்து கொள்ளையடிப்பது தான் திமுகவின் திட்டம். திமுகவை போல் பதவி வெறி பிடித்த கட்சி அதிமுக அல்ல. மக்களுக்கும் விவசாயிகளுக்கும் உதவி செய்யாத அரசு தேவைதானா என யோசிக்க வேண்டும்”,என திமுகவை விமர்சித்தார்.எடப்பாடி.
தொடர்ந்து பேசிய எடப்பாடி பழனிசாமி, ”உதயநிதியின் ஸ்டைலை கையிலெடுத்து, முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் உதியநிதி ஸ்டாலின் ஆகியோர் பிரதமர் மோடியுடம் இருக்கும் புகைப்படத்தை காண்பித்து ”இது தான் கள்ளக்கூட்டணி” என பேசியது திமுகவினரை அதிர்ச்சியடைய செய்துள்ளது.
அதுமட்டுமின்றி, அண்மையில் என்.சி.பி-யால் கைது செய்யப்பட்ட போதைப்பொருள் கடத்தல் மன்னன் ஜாபர் சாதிக் உடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் உதயநிதி ஸ்டாலின் இருக்கும் புகைப்படத்தை கூட்டத்தில் காண்பித்து எடப்பாடி பழனிசாமி பேசினார். இது தான் ’அவன் பொருள எடுத்து அவனையே போடுறதா?; என சினிமா டையலாக்குடன் எடப்பாடி பேசியதை அதிமுகவினர் சமூக வலைதளங்களில் ஷேர் செய்கிறார்கள்.