1. Home
  2. தமிழ்நாடு

ஏப்ரல் 30ம் தேதி தஞ்சாவூர் ராஜராஜ சோழன் மணிமண்டபம் திறப்பு..!

1

லகப் புகழ்பெற்ற பல்வேறு பாரம்பரிய நினைவுச் சின்னங்களின் முக்கிய சுற்றுலா தலமாக திகழ்கிறது தஞ்சாவூர் மாநகரம்.  இங்கு தஞ்சை பெரியகோவில், அரண்மனை, அருங்காட்சியகம், புன்னைநல்லூர் மாரியம்மன் கோவில், சமுத்திரம் ஏரி போன்ற வரலாற்றுப் பெருமைக்குரிய இடங்கள் சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கின்றன.

1995-ஆம் ஆண்டு தஞ்சாவூரில் நடைபெற்ற 8-வது உலகத் தமிழ் மாநாட்டின் போது, புதுக்கோட்டை சாலை மற்றும் வல்லம் தேசிய நெடுஞ்சாலை 1 இடையே, மாவட்ட ஆட்சியரின் முகாம் அலுவலகம் அருகில் 3.23 ஏக்கர் பரப்பளவில் இந்த மணிமண்டபம் கட்டப்பட்டது.

72 அடி உயர கோவில் கோபுர வடிவில் கட்டப்பட்டுள்ள இந்த மண்டபம், பொதுமக்கள் நகரின் அழகைக் காண ஏறிச் செல்லக் கூடியதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. வளாகத்திற்குள் மாமன்னர் ராஜராஜ சோழன் குதிரை மேலே பறக்கும் வெண்கலச் சிலை சிறப்பாக அமைக்கப்பட்டுள்ளது.

மணிமண்டபத்தை சுற்றி பூங்காக்கள், சிறுவர்களுக்கான விளையாட்டு உபகரணங்கள், செயற்கை நீருற்று மற்றும் அமர்விற்கான இடங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. மேலும், மணிமண்டபத்தின் அடித்தளத்தில் தமிழ்நாடு தொல்லியல் துறையின் கீழ் அருங்காட்சியகமும் செயல்படுகிறது.


இதன் காரணமாக, உள்ளூர் மக்கள் மட்டுமின்றி வெளி மாவட்டத்தில் இருந்தும் அதிகமான சுற்றுலாப் பயணிகள் இங்கே வருகை புரிந்து வந்தனர். பின்னர், மணிமண்டப பராமரிப்பு பணிகள் தஞ்சாவூர் சுற்றுலா வளர்ச்சி குழுமத்திடம் ஒப்படைக்கப்பட்டது.


2023 அக்டோபரில் மணிமண்டபத்தை முழுமையாக சீரமைக்கும் பணிகள் தொடங்கிது. இதன் காரணமாக பொதுமக்கள் பார்வையிட தடை விதிக்கப்பட்டது. ரூ.3.5 கோடி மதிப்பில் மேற்கொள்ளப்பட்ட இப்பணிகள் கடந்த ஆண்டு டிசம்பரில் முடிந்தன.

இதனை தொடர்ந்து பொதுமக்களின் வலியுறுத்தலின் பேரில், ஏப்ரல் 30-ம் தேதி மணிமண்டபம் மீண்டும் திறக்கப்பட உள்ளது. இந்த விழா உயர் கல்வித் துறை அமைச்சர் கோவி. செழியன் தலைமையில், மாவட்ட ஆட்சியர் பா. பிரியங்கா பங்கஜம் முன்னிலையில் நடைபெற உள்ளது. இதற்கான அனைத்து ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.

Trending News

Latest News

You May Like