1. Home
  2. தமிழ்நாடு

வரும் 7ஆம் தேதி தஞ்சாவூர் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை..!

1

சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் வருகிற 7-ந் தேதி (புதன்கிழமை) நடைபெறுகிறது. அன்று காலை 5.30 மணிக்கு மேல் 6.30 மணிக்குள் தேர் வடம்பிடித்து இழுக்கப்படுகிறது. தேர் வடம்பிடித்து இழுக்கப்பட்டு தஞ்சையில் உள்ள 4 ராஜவீதிகளிலும் வலம் வருகிறது.

இந்த நிலையில், தஞ்சை பெரிய கோவில் தேரோட்டத்தையொட்டி, வருகிற 7-ம் தேதி உள்ளூர் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் பிரியங்கா பங்கஜம் அறிவித்துள்ளார். மேலும் இந்த விடுமுறையை ஈடுசெய்யும் வகையில் 24-ம் தேதி (சனிக்கிழமை) மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள், கல்வி நிறுவனங்கள் செயல்படும் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

Trending News

Latest News

You May Like