பயங்கரவாதம் வேரோடு அழிக்கப்படும் - அமித்ஷா எச்சரிக்கை..!

உள்துறை அமைச்சர் அமித்ஷா பொதுவெளியில் பேசி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அமித்ஷா பேசுகையில்," பயங்கரவாதிகள் அனைவரையும் ஒழிக்கும் வரையில் எங்களது நடவடிக்கைகளை நிறுத்த மாட்டோம். யாராவது ஒரு கோழைத்தனமான தாக்குதலைச் செய்து, அது அவர்களின் பெரிய வெற்றி என்று நினைத்தால், ஒரு விஷயத்தைப் புரிந்து கொள்ளுங்கள். பயங்கரவாதிகளை மோடி அரசு தப்ப விடாது.
பயங்கரவாதம் வேரோடு அழிக்கப்படும்" என டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அமித்ஷா ஆவேசமாக பேசி உள்ளார். ஏற்கனவே இந்திய பாதுகாப்பு படைகளில் பாகிஸ்தான் மீது தாக்குதல் நடத்த திட்டமிட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகி வரும் நிலையில், அமித்ஷாவின் பேச்சு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.