மாமியாருடன் கள்ளத்காதலால் அதிகாலையில் நடந்த பயங்கரம்.. மருமகன் கைது !

மாமியாருடன் கள்ளத்தொடர்பு வைத்திருந்த ஆட்டோ டிரைவரை வெட்டிய மருமகனை போலீசார் கைது செய்தனர்.
சென்னை புளியந்தோப்பு கே.எம்.கார்டன 13ஆவது தெருவை சேர்ந்தவர் மணிவண்ணன்(40). இவர் சொந்தமாக ஆட்டோ ஓட்டி வருகிறார். நேற்று முன்தினம் காலை புளியந்தோப்பு பகுதியில் ஆட்டோவில் சென்றுகாெண்டிருந்தபோது, இரண்டு நபர்கள் வழிமறித்தனர். பின்னர் அவர்கள் மறைத்து வைத்திருந்த அரிவாளால் மணிவண்ணனை சரமாரியாக வெட்டியுள்ளனர்.
இதில் ரத்த வெள்ளத்தில் சரிந்த அவர் சம்பவ இடத்திலேயே மயக்கமடைந்தார். இருவரும் தப்பியோடிய நிலையில், மணிவண்ணனை மீட்டு ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
பின் தலை வலது தோள்பட்டை மார்பு உள்ளிட்ட இடங்களில் பலத்த காயமடைந்த மணிவண்ணன் அங்கு உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். புகாரின்பேரில் புளியந்தோப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர்.
அதில் புளியந்தோப்பு சூளை தட்டாங்குளம் பகுதியைச் சேர்ந்த பிரகாஷ் (23) என்ற நபரின் மாமியார் ஈஸ்வரியிடம் மணிவண்ணன் கள்ளத்தொடர்பு வைத்திருந்ததாக கூறப்படுகிறது. இதனை பலமுறை பிரகாஷ் கண்டித்தும் மணிவண்ணன் தொடர்ந்து பிரகாஷின் மாமியாருடன் நெருக்கமாக பழகி வந்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த பிரகாஷ் தனது நண்பர் சரத் சந்திரன்(20) என்பவருடன் சேர்ந்து மணிவண்ணனை வெட்டியது தெரியவந்தது. போலீசார் பிரகாஷ் மற்றும் சரத் சந்திரன் ஆகியோரை கைது செய்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
newstm.in