சென்னையில் பயங்கரம்..! இரண்டு ரவுடிகள் சரமாரி வெட்டிக் கொலை!

சென்னை கோட்டூர்புரம் அருகே சித்ரா நகர் பகுதியை சேர்ந்தவர்கள் சரித்திர பதிவேடு குற்றவாளி அருண், வயது 25 மற்றும் அவரது நண்பர் படப்பை சுரேஷ்.
இவர்கள் இருவரும் நேற்று இரவு நண்பர்களுடன் இணைந்து மது அருந்திவிட்டு கோட்டூர்புரம் நாகவல்லி அம்மன் கோவில் அருகே மதுபோதையில் படுத்து தூங்கினர்.
இந்த நிலையில் இரவு பத்து மணி அளவில் அப்பகுதிக்கு இரு சக்கர வாகனங்களில் வந்த சுமார் எட்டு பேர் கொண்ட கும்பல் மதுபோதையில் தூங்கிக் கொண்டிருந்த அருள் மற்றும் அவரது நண்பர் படப்பை சுரேஷ் ஆகிய இருவரையும் அரிவால் மற்றும் கத்தியால் சரமாரியாக வெட்டியதாக தெரிகிறது. மதுபோதையில் இருந்த நிலையில் இருவரும் தப்பிக்க முடியாமல் வலியில் அலறி துடித்துள்ளனர்.
இந்த தாக்குதலில் படப்பை சுரேஷை சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். அருண் உடல் முழுவதும் பயங்கர வெட்டு காயங்களோடு உயிருக்கு போராடிய நிலையில் ராயப்பேட்டை மருத்துவமனையில் அனுப்பி வைக்கப்பட்டு அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
இந்த இரட்டை கொலை குறித்து தற்போது கோட்டூர்புரம் காவல்துறையின் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தொடர்ந்து சிசிடிவி காட்சிகளை கைப்பற்றிய போலீசார் எட்டு பேர் கொண்ட கும்பலை தேடி வருவதாக தெரிகிறது.