1. Home
  2. தமிழ்நாடு

தேமுதிக தலைவர் விஜயகாந்த் கொரோனாவால் பாதிப்பு.. நள்ளிரவில் மருத்துவமனையில் அனுமதி !

தேமுதிக தலைவர் விஜயகாந்த் கொரோனாவால் பாதிப்பு.. நள்ளிரவில் மருத்துவமனையில் அனுமதி !


தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் (68) உடல்நல பாதிப்பு காரணமாக நேற்று இரவில் சென்னை, நந்தம்பாக்கத்தில் உள்ள மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

விஜயகாந்திற்கு கொரோனா தொற்று உறுது செய்யப்பட்டுள்ள நிலையில் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

ஏற்கனவே உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ள விஜயகாந்திற்கு தற்போது கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக வந்துள்ள தகவல்கள் தேமுதிக கட்சி தொண்டர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆனால், விஜயகாந்திற்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளதாக வெளியான தகவல்கள் தொடர்பாக மருத்துவமனை நிர்வாகம் அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

newstm.in

Trending News

Latest News

You May Like