எப்படிப்பட்ட ஆட்சி அமைக்க திட்டமிட்டுளோம் என்பதை மக்களிடம் எடுத்துக்கூறுங்கள் - கோவையில் த.வெ.க. தலைவர் விஜய்..!

மேற்கு மண்டல பூத் ஏஜெண்டுகள் மாநாடு கோவையில் நேற்று துவங்கியது. கட்சியின் தலைவர் விஜய், பொதுச்செயலாளர் ஆனந்த், ஆதவ் அர்ஜுனா மற்றும் கட்சியின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில், த.வெ.க. தலைவர் விஜய் பேசுகையில், கோவை என்றாலும், கொங்கு மண்டலம் என்றாலும் இந்த மண்ணின் மரியாதை தான் நியாபகம் வருகிறது. இன்று கோவையில் நடைபெறும் த.வெ.க.பூத் முகவர்கள் பயிற்சி பட்டறை நிகழ்வை பார்க்க கட்சியின் வேறு பெரும் நிகழ்ச்சி போல அமைந்துள்ளது.
அதே சமயம் வெறும் வாக்குக்காக நடக்கும் கூட்டம் இந்த பூத் முகவர்கள் பயிற்சி பட்டறை அல்ல. நாம் ஆட்சிக்கு வர நினைப்பதே மக்கள் நலனுக்காக தான். இந்த கூட்டத்தில் மக்கள் வாக்கை மட்டும் வாங்கவேண்டும் என்ற எண்னத்தில் இக்கூட்டம் நடத்தப்படவில்லை. மக்களுடன் எப்படி இனைந்து இருப்பது என்பதை ஆராயும் கூட்டமாக இது நடத்தப்படுகிறது, என்றார்.
நமது கட்சியின் மேல் மக்களுக்கு நம்பிக்கையை கொண்டுவரும் நபர்களாக இருக்கப்போவது பூத் முகவர்களான நீங்களே. நாம் எப்படி பட்ட ஆட்சி அமைக்க திட்டமிட்டுளோம் என்பதை மக்களிடம் எடுத்துக்கூறுங்கள்.
நம்மிடம் நேர்மை உள்ளது, கறைபடிய அரசியல் செய்யும் லட்சியமும், உழைக்க தெம்பும், பேச உண்மையும், செயல்பட திறமையும் உள்ளது. நம்பிக்கையுடன் இருங்கள் வெற்றி நிச்சயம்.
இவ்வாறு அவர் பேசினார்.