1. Home
  2. தமிழ்நாடு

தெலங்கானா முதல்வர் சந்திரசேகரராவின் ஹெலிகாப்டர் அவசரமாக தரையிறக்கம்..!

1

சத்தீஸ்கா், மத்திய பிரதேசம், மிஸோரம், ராஜஸ்தான், தெலங்கானா ஆகிய மாநிலங்களுக்கு நவம்பர் மாதத்தில் சட்டப்பேரவைத் தோ்தல் நடைபெற இருக்கிறது. இதையொட்டி தேசிய, மாநில கட்சிகள் அங்கு தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன.  இதில், தெலங்கானா மாநிலத்துக்கு வருகிற நவம்பர் 30 ஆம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது.

இந்நிலையில், மகபூப்நகர் மாவட்டம் தேவரகத்ரா பகுதியில் பொதுக்கூட்டத்தில் கலந்துகொள்ள  முதல்வர் சந்திரசேகர் ராவ், ஹெலிகாப்டரில் புறப்பட்டார்.  அப்போது திடீரென ஹெலிகாப்டரில் தொழில்நுட்பக்கோளாறைக் கண்டறிந்து கூறியதால் முதல்வரின் பண்ணை வீட்டில் உடனடியாக தரையிறக்கப்பட்டது. இதனால் பெரும் சேதம் தவிர்க்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. 

Trending News

Latest News

You May Like