1. Home
  2. தமிழ்நாடு

சாலை விபத்தில் பலியான இளம் பெண்ணின் உடல் உறுப்புகள் தானம்!

1

விராலிமலை சேர்ந்தவர் சுப்ரமணி (27). இவர் கடந்த ஐந்து வருடத்திற்கு முன்பு சுஷ்மிதா (26) என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு நான்கு வயதில் ஹரிணி என்ற பெண் குழந்தை உள்ளது.

இந்த நிலையில் சிவகங்கை மாவட்டம், தேவகோட்டையில் தனியார் நிதி நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வரும் சுப்பிரமணி புதுக்கோட்டை பெரியார் நகரில் தனியாக வீடு எடுத்து வசித்து வருகிறார்.

கடந்த பத்தாம் தேதி இரவு புதுக்கோட்டை திருவப்பூர் முத்துமாரியம்மன் கோயில் திருவிழாவில் பங்கேற்று விட்டு இரு சக்கர வாகனத்தின் முன்னாள் மகளான ஹரிணியை அமர்த்திக் கொண்டும் இரு சக்கர வாகனத்தின் பின்னால் மனைவி சுஷ்மிதாவை அமர்த்தி கொண்டு வீடு நோக்கி சென்று கொண்டிருந்தபோது எதிரே வந்த ஆம்னி பேருந்து இருசக்கர வாகனம் மீது மோதியதில் நிகழ்வு இடத்திலேயே சுப்ரமணி, ஹரிணி ஆகிய இருவரும் உயிரிழந்தனர்.பலத்த காயமடைந்து உயிருக்கு ஆபத்தான நிலையில் சுய நினைவின்றி திருச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சுஷ்மிதா அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

இந்த நிலையில் மூளை சாவு அடைந்த சுஷ்மிதாவின் உடல் உறுப்புகளை தானம் செய்ய அவரது உறவினர்கள் விருப்பம் தெரிவித்ததை தொடர்ந்து கல்லீரல், இருதயம், தோல், கார்னியா, சிறுநீரகம் உள்ளிட்டவைகள் மருத்துவர்கள் துணையோடு சுஷ்மிதாவின் உடலில் இருந்து எடுக்கப்பட்டு பாதுகாப்புடன் சென்னைக்கு விமானத்தில் அனுப்பப்பட்டது.இதனை தொடர்ந்து உயிரிழந்த சுஷ்மிதாவின் சடலம் கணவரின் சொந்த ஊரான விராலிமலை கொண்டுவரப்பட்டு அரசு மரியாதையுடன் உடல் அடக்கம் செய்யப்பட்டது.

Trending News

Latest News

You May Like