இளம்பெண் தற்கொலை..அதுவும் திருமணமான 2 மாதத்தில்...நெஞ்சை உலுக்கும் ஆடியோ..!

அவிநாசியை சேர்ந்தவர் அண்ணாதுரை, பனியன் நிறுவனம் நடத்தி வருகிறார். ஈரோடு இடைத்தேர்தலில் ஆட்டோ சின்னத்தில் போட்டியிட்டுள்ளார். இவரது மகள் ரிதன்யா (27) என்பவருக்கு திருப்பூர் மாவட்ட காங்கிரஸ் கட்சி தலைவர் கிருஷ்ணனின் மூத்த மகன் வழி பேரன் கவின் குமார் (28) என்பவருக்கு கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொடுத்துள்ளனர்.
இந்நிலையில் தன்னை உடல் ரீதியாகவும் மனரீதியாகவும் கணவர் கவின்குமார், மாமனார் ஈஸ்வரமூர்த்தி மற்றும் மாமியார் சித்ராதேவி என மூவரும் சேர்ந்து கடுமையாக சித்திரவதை செய்வதாகவும், இந்த வாழ்க்கையை இனி தன்னால் வாழ முடியாது எனவும் மற்றொரு வாழ்க்கையை தேர்ந்தெடுக்க தனக்கு உடன்பாடு இல்லை எனவும் தனது தந்தைக்கு வாட்ஸ் அப் மூலம் ஆடியோ அனுப்பி விட்டுள்ளார்.
இதனைக் கேட்டு அதிர்ச்சியடைந்த அவரது தந்தை உடனடியாக தனது மகளைத் தொடர்பு கொள்ளவே அவ்ரை தொடர்புகொள்ள முடியாமல் போயுள்ளது.
இந்நிலையில் மொண்டி பாளையம் கோவிலுக்கு செல்லும் வழியில் சாலையோரம் காரை நிறுத்திவிட்டு தென்னை மரத்திற்கு பயன்படுத்தும் பூச்சி மாத்திரையை உட்கொண்டு அப்பெண் காரிலேயே சரிந்து விழுந்துள்ளார்.இதனைக்கண்ட அக்கம் பக்கத்தினர் சேயூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்த நிலையில் ரிதன்யாவின் உடலை கைப்பற்றிய காவல்துறையினர் அவிநாசி அரசு மருத்துவமனைக்கு பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். திருமணம் ஆகி 78 நாட்களில் புதுப்பெண் தற்கொலை செய்து கொண்டதால் ஆர்டிஓ விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதனிடையே ரிதன்யா தற்கொலை செய்து கொள்ளும் முன்பு தனது தந்தைக்கு அனுப்பிய ஆடியோ வெளியாகிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.