ஆசிரியரே இப்படி எல்லாம் பேசலாமா ?
![1](https://newstm.in/static/c1e/client/106785/uploaded/1a11e78b9c780c5e8e90798d6c367415.png?width=836&height=470&resizemode=4)
கர்நாடக மாநிலம் சிவமோகா மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளி ஆசிரியை மஞ்சுளா மாணவர்களுக்கு பாடம் நடத்தி கொண்டு இருந்த பொழுது சில மாணவர்களுக்கும் ஆசிரியை மஞ்சுளாவிற்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது.
சமீபத்தில் இவர் வகுப்பில் பாடம் நடத்திய போது இஸ்லாமிய மாணவர்களை பார்த்து 'பாகிஸ்தானுக்கு செல்லுங்கள்' எனக் கூறியதாகத் தெரிகிறது. இது குறித்து சம்பந்தப்பட்ட மாணவர்கள் பள்ளி நிர்வாகத்திடம் புகார் அளித்ததை அடுத்து இதுகுறித்து மஞ்சுளாவிடம் விசாரணை செய்த போது.., அவர் செய்த் குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளார், எனவே மஞ்சுளாவை சிவமேகா அரசு பள்ளி தலைமை ஆசிரியர், ஆசிரியை மஞ்சுளாவை இடமாற்றம் செய்துள்ளார்.