1. Home
  2. தமிழ்நாடு

ஆண்கள் மட்டும் பங்கேற்ற திருவிழாவில் ‘ருசி’கரம்.. 100 கிடாக்கள் வெட்டி விருந்து படையல் !!

ஆண்கள் மட்டும் பங்கேற்ற திருவிழாவில் ‘ருசி’கரம்.. 100 கிடாக்கள் வெட்டி விருந்து படையல் !!


ஆண்கள் மட்டுமே பங்கேற்கும் கரும்பாறை முத்தையா சுவாமி கோயில் திருவிழாவில், பக்தர்களுக்கு 100 கிடா வெட்டி சுவைமிகு விருந்து படைக்கப்பட்டது.

மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே அனுப்பபட்டியில் கரும்பாறை முத்தையா கோயில் உள்ளது. விவசாயம் செழிக்க வேண்டும் என்பதற்காக, இங்கு மார்கழி மாதம் மூன்று நாட்கள் நடக்கும் திருவிழாவில் ஆண்கள் மட்டுமே பங்கேற்பர். விழாவில் மூன்றாம் நாள் இரவு சக்தி கிடாய் வெட்டப்படும்.

ஆண்கள் மட்டும் பங்கேற்ற திருவிழாவில் ‘ருசி’கரம்.. 100 கிடாக்கள் வெட்டி விருந்து படையல் !!

தொடர்ந்து பக்தர்கள் நேர்த்திக்கடனாக செலுத்திய 100 கருப்பு கிடாய்கள் வெட்டப்பட்டு, சமையல் செய்யப்பட்டது. நேற்று காலை சுவாமிக்கு சிறப்பு பூஜை நடத்தப்பட்டு அசைவ உணவு பரிமாறப்பட்டது. கோயிலில் வளாகத்தில் வரிசையாக 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள் அமர வைக்கப்பட்டு ஒரே நேரத்தில் அனைவருக்கும் உணவு பரிமாறப்பட்டது. அனைத்து இலைகளுக்கும் பரிமாறப்பட்ட பின்புதான் உணவருந்த வேண்டும் என்பது ஐதீகம்.

ஆண்கள் மட்டும் பங்கேற்ற திருவிழாவில் ‘ருசி’கரம்.. 100 கிடாக்கள் வெட்டி விருந்து படையல் !!

திருவிழாவில் திருமங்கலம், கரடிக்கல், சொரிக்காம்பட்டி, செக்கானூரணி, சிக்கம்பட்டி, கொக்குளம், தேன்கல்பட்டி, தோப்பூர், மூனாண்டிபட்டி, கிண்ணிமங்கலம், உரப்பனூர், சாத்தங்குடி, உசிலம்பட்டி மற்றும் தேனி, கம்பம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த ஏராளமானோர் பங்கேற்றனர். பக்தர்கள் சாப்பிட்ட பின் இலையை யாரும் எடுக்க மாட்டார்கள். அந்த இலை காய்ந்து காற்றில் பறந்த பின்புதான் பெண்கள் இந்த பகுதியில் நடமாட வேண்டுமென்பது இக்கிராம ஐதீகம்.

newstm.in

Trending News

Latest News

You May Like