1. Home
  2. தமிழ்நாடு

டாஸ்மாக் கடைகள் மூடல்.. கலெக்டர் திடீர் அறிவிப்பு..!

டாஸ்மாக் கடைகள் மூடல்.. கலெக்டர் திடீர் அறிவிப்பு..!


புதுக்கோட்டை நார்த்தாமலை அருகே, மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் கடந்த 30-ம் தேதி துப்பாக்கிச் சுடும் பயிற்சியில் ஈடுபட்டிருந்தபோது வீட்டின் வெளியே நின்று கொண்டிருந்த புகழேந்தி என்ற சிறுவனின் தலையில் குண்டு பாய்ந்து படுகாயம் அடைந்தார்.

இதையடுத்து அந்த சிறுவன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், சிகிச்சை பலன் இன்றி திடீரென அந்த சிறுவன் உயிரிழந்தார். இறந்த சிறுவனின் குடும்பத்திற்கு நிவாரண கேட்டு பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து முதல்வர் ஸ்டாலின் சிறுவன் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்க உத்தரவிட்டுள்ளார்.

இந்நிலையில், இந்த சிறுவன் புகழேந்தியின் உடல் அடக்கம் செய்யப்படுவதையொட்டி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, நார்த்தாமலை, பொம்மாடிமலை, கீரனூர் நகரில் உள்ள 10 டாஸ்மாக் கடைகள் மூடப்படுவதாக அம்மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.

Trending News

Latest News

You May Like