நாளை டாஸ்மாக் கடைகள் இயங்காது..!
![1](https://newstm.in/static/c1e/client/106785/uploaded/cb4c1156c8287f9560ead5a3e4a5fad1.jpg?width=836&height=470&resizemode=4)
நாளை 21-ம் தேதி மகாவீர் ஜெயந்தி மற்றும் மேதினத்தை முன்னிட்டு மே 1-ம் தேதியன்று டாஸ்மாக் கடைகள் மற்றும்பார்களை மூட உத்தரவிடப்பட் டுள்ளது.
அனைத்து டாஸ்மாக் மதுபான சில்லறை விற்பனைக் கடைகள் மற்றும் அதைச் சார்ந்த பார்கள், எப்எல்-2 உரிமம் கொண்ட கிளப்புகளைச் சார்ந்த பார்கள், எப்எல் 3 உரிமம் கொண்ட ஹோட்டல்களைச் சார்ந்த பார்கள் மற்றும் எப்எல்3 (ஏ), எப்எல்3 (ஏஏ) மற்றும் எப்எல்11உரிமம் கொண்ட பார்கள் அனைத்தும் கண்டிப்பாக மூடப்பட்டு, மதுபானம் விற்பனை செய்யக்கூடாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
லோக்சபா தேர்தல் காரணமாக ஏற்கனவே 17ஆம் தேதி முதல் 19ஆம் தேதி வரை மதுபான கடைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.