தமிழகத்தில் நாளை டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை..!
![1](https://newstm.in/static/c1e/client/106785/uploaded/cb4c1156c8287f9560ead5a3e4a5fad1.jpg?width=836&height=470&resizemode=4)
நாளை மே 1 உழைப்பாளர் தினத்தை முன்னிட்டு அனைத்து டாஸ்மாக் கடைகள் மற்றும் பார்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
டாஸ்மாக் மதுபான கடைகள், டாஸ்மாக் பார்கள் மற்றும் தனியார் மதுபான கடைகள், பார்கள் அனைத்தும் மூடப்பட வேண்டும். அன்றயை தினங்களில் மதுபானம் விற்பனை செய்வது தெரிந்தால் டாஸ்மாக் மதுபான கடைகளில் மேற்பார்வையார்கள், விற்பனையாளர்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
மேலும் தனியார் மதுகூடங்களில் மதுபானம் விற்பனை செய்வது தெரிந்தால் உரிமங்கள் தற்காலிகமாக நிறுத்தி வைத்தல், ரத்து செய்தல் போன்ற நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மே 1-ம் தேதி அனைத்து டாஸ்மாக் மதுபான சில்லறை விற்பனைக் கடைகள் மற்றும் அதைச் சார்ந்த பார்கள், எப்எல்-2 உரிமம் கொண்ட கிளப்புகளைச் சார்ந்த பார்கள், எப்எல் 3 உரிமம் கொண்ட ஹோட்டல்களைச் சார்ந்த பார்கள் மற்றும் எப்எல்3 (ஏ), எப்எல்3 (ஏஏ) மற்றும் எப்எல்11உரிமம் கொண்ட பார்கள் அனைத்தும் கண்டிப்பாக மூடப்பட்டு, மதுபானம் விற்பனை செய்யக்கூடாது என அறிவிக்கப்பட்டுள்ளது.