1. Home
  2. தமிழ்நாடு

சுதந்திர தினத்தன்று டாஸ்மாக் கடைகளுக்கு முக்கிய உத்தரவு..!!

tasmac
வரும் ஆகஸ்டு 15-ம் தேதி சுதந்திர தினம் கொண்டாடப்படும் நிலையில், டாஸ்மாக் கடைகளுக்கு முக்கியமான உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

நாட்டின் 77-வது சுதந்திர தினம் வரும் ஆகஸ்டு 15-ம் தேதி கொண்டாடப்படுகிறது. இதையொட்டி நாடு முழுவதும் உள்ள பல முக்கிய நகரங்களில் சிறப்பு பாதுகாப்புப் பணிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

இந்நிலையில் வரும் சுதந்திர தினத்தன்று தமிழகத்தில் இருக்கும் அனைத்து டாஸ்மாக் கடைகளும் மூடப்பட வேண்டும் என்று டாஸ்மாக் நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. மதுபான சில்லறை விற்பனை கடைகள் மட்டுமின்றி, மதுக்கூடங்கள் மூடப்பட வேண்டும் என்று உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதை தவறும் பட்சத்தில் துறை ரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும். கள்ளச்சந்தையில் மது விற்கப்படுவதைத் தடுக்க மாவட்ட காவல்துறை அதிகாரிகள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட வேண்டும் என்று டாஸ்மாக் நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


 

Trending News

Latest News

You May Like