1. Home
  2. தமிழ்நாடு

செங்கல்பட்டு மாவட்டத்தில் மே 11-ல் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை..!

1

வன்னியர் சங்கம் மற்றும் பாமக சார்பில் மாமல்லபுரத்தில் கடந்த 2013-ம் ஆண்டு ஏப்ரல் 25-ம் தேதி சித்திரை முழுநிலவு மாநாடு நடைபெற்றது. இந்நிலையில் வன்னியர் சங்கத்தின் சித்திரை பவுர்ணமி வன்னியர் இளைஞரணி மாநாடு 12 ஆண்டுகளுக்குப் பிறகு மே 11-ம் தேதி நடைபெறவுள்ளது. செங்கல்பட்டு மற்றும் தாம்பரம் மாநகர காவல் துறை சார்பில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

இதுதொடர்பாக மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: 2025-ம் ஆண்டு மே 11ம் தேதி (ஞாயிற்று கிழமை) சித்திரை முழுநிலவு இளைஞர் பெருவிழா மாநாடு செங்கல்பட்டு மாவட்டம், திருப்போரூர் வட்டம், திருவிடந்தை கிராமத்தில் நடைபெறுவதை முன்னிட்டு அன்று செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் மதுபானக் கடைகள் மற்றும் பார்கள் மூடப்பட்டிருக்கும்.

செங்கல்பட்டு மாவட்டத்தில் செயல்பட்டு வரும் டாஸ்மாக் மதுபான சில்லறை விற்பனை மதுபானக் கடைகள், பார்கள் மற்றும் அனைத்து மதுக்கூடங்களும் மூடப்பட்டிருக்க வேண்டும். அன்றைய தினத்தில் மதுபானக் கடைகள், மதுபான கூடங்கள் திறந்திருந்தாலோ அல்லது சட்டவிரோதமான இதர வழிகளில் விற்பனை செய்தாலோ உரிய சட்ட விதிமுறைகளின்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

Trending News

Latest News

You May Like