1. Home
  2. தமிழ்நாடு

எகிறிய டாஸ்மாக் வருமானம்.. ரூ.48,344 கோடியாக உயர்வு..!

Q

தமிழகத்தில் மது விற்பனையாது தமிழ்நாடு மாநில வாணிப கழகம் என்று அழைக்கப்படும் என்று டாஸ்மாக் மூலம் செய்யப்பட்டு வருகிறது. தமிழகம் முழுவதும் சில்லறை விற்பனை கடைகள் மூலம் உள்நாடு மற்றும் வெளி நாடுகளில் இருந்து தயாரிக்கப்பட்ட மதுபானங்கள் விற்பனை செய்யப்படுகின்றன.

2022-2023-ஆம் ஆண்டில் டாஸ்மாக் மூலம் ரூ.44,000 கோடி வருவாய் கிடைத்துள்ளதாக மது விலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை கொள்கை விளக்க குறிப்பேட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2003-04-ஆண்டில் டாஸ்மாக் மூலம் ரூ.3,639.93 கோடி மட்டுமே வருவாய் கிடைத்தது. இந்நிலையில், 20 ஆண்டுகளில் இந்த வருவாய் ரூ.44,000 கோடியாக உயர்ந்துள்ளது. 2021-22 ஆண்டில் டாஸ்மாக் மூலம் ரூ.36,050 கோடி வருவாய் கிடைத்துள்ளது. 2022-23 ஆண்டில் டாஸ்மாக் மூலம் ரூ.44,098 கோடி வருவாய் கிடைத்துள்ளது. 

2024 - 2025 நிதியாண்டில் டாஸ்மாக் மதுபான வருமானம் ரூ.2,488 கோடி என்ற அளவில் அதிகரித்துள்ளதாக மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை கொள்கை விளக்கு குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் மொத்த வருமானமானது ரூ.48,344 கோடியாக உயர்ந்துள்ளது. இது கடந்த 2023 - 2024 நிதியாண்டில் ரூ.45,855 கோடியாக இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்ச்சியாக வருடா வருடம் டாஸ்மாக் வருமானம் அதிகரித்து வருகிறது.

Trending News

Latest News

You May Like