தமிழிசை சவுந்தரராஜன் கைது..!
அண்ணா பல்கலைக்கழகம் வளாகத்திற்குள் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் தமிழ்நாட்டில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.
மாணவிக்கு நேர்ந்த வன்கொடுமை சம்பவத்தை கண்டித்து பாஜக சார்பில் இன்று(டிச.26) காலை 10.30 மணிக்கு சென்னை உட்பட 4 மாவட்டங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. மாணவிக்கு நேர்ந்த கொடூரத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்த தலைமை அறிவுறுத்தியுள்ளது. இதையடுத்து, பாஜக சார்பில் இன்று நடைபெற இருந்த வாஜ்பாய் பிறந்தநாள் உட்பட அனைத்து நிகழ்ச்சிகளும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட பா.ஜ., மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் உள்ளிட்டோர் கைது