1. Home
  2. தமிழ்நாடு

தமிழகத்தில் இன்று இந்த பகுதிகளில் முழு நேர மின்தடை அறிவிப்பு..!

1

தமிழகத்தில் பல்வேறு துணை மின் நிலையங்களில் இருந்து தமிழ்நாடு மின் வாரியத்தின் சார்பில் அவ்வப்போது மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவது காரணமாக மின் தடை செய்யப்படுவது வழக்கமான காரியமாகும்.

அந்த வகையில் இன்று மே 9-ந் தேதி வெள்ளிக்கிழமை அன்று தமிழகம் முழுவதும் ஒரு சில பகுதிகளில் முழுநேர மின்தடை ஏற்படும் பகுதிகள் குறித்த அறிவிப்பை மின்சார வாரியத்தின் சார்பில் வெளியிடப்பட்டுள்ளது. அதன் விவரம் பின்வருமாறு:-

சென்னை மற்றும் திருவாரூர் மாவட்டங்களில் இன்று (09.05.2025) அன்று காலை 09:00 மணி முதல் மதியம் 2:00 மணி வரை மின் வாரிய பராமரிப்பு பணி காரணமாக கீழ்காணும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும். மதியம் 2:00 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் சீராக இருக்கும்.


சென்னை மின் தடை பகுதிகள்:-

முழு பட்டாபிராம், CTH சாலை, திருவள்ளுவர் நகர், கக்கன்ஜி நகர், சத்திரம், காமராஜ புரம், சோழன் நகர், VGN இரண்டாம் கட்டம் முதல் VII வரை, ஐயப்பன் நகர், கண்ணப்பாளையம், VGV நகர், தனலட்சுமி நகர்

திருவாரூர் மின்தடை பகுதிகள்:-

மேட்டுப்பாளையம், விளக்குடி, ராயநல்லூர் ஆகிய பகுதிகளில் மின்தடை செய்யப்படும்.


பாதுகாப்புக்காக மின்தடை

இதன் காரணமாக பொதுமக்களின் பாதுகாப்பு காரணம் கருதி வீட்டில் பயன்படுத்தும் மின்சார சாதனங்கள் பழுதாகி விடக்கூடாது என்பதற்காகவும் மின்சார வினியோகமானது ஒரு சில பகுதிகளில் குறிப்பிட்ட நேரத்திற்கு நாளை வெள்ளிக்கிழமை மின்தடை செய்யப்படும். எனவே இந்த பகுதிகளில் மின்தடையை பொறுத்து மின் வாரிய ஊழியர்களுக்கு பொதுமக்கள் தகுந்த ஒத்துழைப்பு வழங்கிட வேண்டும் என மின்சார வாரியத்தின் சார்பில் கேட்டு கொள்ளப்படுகிறார்கள்.

Trending News

Latest News

You May Like