தமிழ்நாடு சட்டஒழுங்கு டிஜிபி சங்கர் ஜிவாலின் பதவிக்காலம் நிறைவு..!
கடந்த 2021 ஆம் ஆண்டு ஜூலை மாதம் சட்டம் ஒழுங்கு டிஜிபியாக சங்கர் ஜிவால் பொறுப்பேற்றுக்கொண்டார். இவர் தனது பதவி காலத்தில் கள்ளகுறிச்சி மாவட்டத்தில் உள்ள கனியாமுத்து பள்ளி மாணவி ஸ்ரீமதி தொடர்பான கலவரம் , அதிமுக அலுவலகத்தில் ஏற்பட்ட கலவரம் உள்ளிட்ட பல கலவரங்களை திறம்பட கையாண்டார். மேலும் இவரின் பதவி காலம் வரும் ஆகஸ்ட் 31ஆம் தேதி உடன் நிறைவடைய உள்ளது.
இந்த நிலையில் அடுத்த டிஜிபியை தேர்வு செய்ய தீவிரமாக களமிறங்கி உள்ளது. தமிழ்நாடு உள்துறை டிஜிபியாக ஒருவர் தேர்வு செய்யப்பட்டால் 30 ஆண்டுகள் ஐபிஎஸ் அதிகாரியாக பணியாற்றி இருக்க வேண்டும். அதில் குறைந்தபட்சம் ஆறு மாதங்கள் மத்திய அரசு பணியில் இருந்திருக்க வேண்டும்.
மேலும் டிஜிபியாக தேர்வு செய்யும் நபர் மீது சிபிஐ மற்றும் நீதிமன்றங்களில் வழக்குகள் நிறுவையில் இருக்கக்கூடாது என்ற விதிமுறையும் உள்ளது.
இந்த விதிகளின் அடிப்படையில், டிஜிபியாக பொறுப்பேற்கும் அந்தஸ்தில் இருக்கும் 8 ஐபிஎஸ் அதிகாரிகளை தமிழ்நாடு உள்துறை தேர்வு செய்து யூபிஎஸ்சி கமிட்டிக்கு அனுப்பும்.பின்னர் அவர்களில் இருந்து மூன்று பேரை தேர்வு செய்து தமிழ்நாடு அரசுக்கு யுபிஎஸ் சி கமிட்டி அனுப்பும். அந்த மூன்று பேரில் இருந்து முதலமைச்சரின் பரிந்துரையில் டிஜிபி நியமிக்கப்படுவார்.
டிஜிபி ஆகும் அந்தஸ்தில் தற்போது சந்தீப்ராய் ரத்தோர், சீமா அகர்வால், ராஜீவ் குமார், அபய்குமார் சிங்,வன்னிய பெருமாள் மகேஷ் குமார் அகர்வால் ,வெங்கட்ராமன் , வினித் குமார் வான்கடே ஆகிய அதிகாரிகளின் பெயர் பட்டியல் தயாரிக்கப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.
தற்போது சந்தீப்ராய் ரத்தோ போலீஸ் பயிற்சி அகாடமியின் டிஜிபியாக பணியாற்றி வருகிறார். இவர் சட்ட ஒழுங்கு டிஜிபியாக இருந்த போது சிறப்பாக பணியாற்றியதாக பாராட்டப்பட்ட இவர். பல மாவட்டங்களில் எஸ்பியாக பணியாற்றிய அனுபவம் பெற்றவர் என்பதால் புதிய டிஜிபி பதவிக்கான பட்டியலில் இருக்கிறார்.
தமிழ்நாட்டில் பெண்களுக்கான பாதுகாப்பு குறித்து எதிர்க்கட்சிகள் விமர்சித்து வரும் நிலையில் , அதனை சமாளிக்கும் வகையில் தற்பொழுது தீயணைப்புத்துறை தலைவராகவும், மிகவும் சீனீராகவும் உள்ள சீமா அகர்வால் ஐபிஎஸ் தேர்வு செய்யப்பட வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்படுகிறது. அப்படி தேர்வாகும் பட்சத்தில் பிறகு சட்டம் ஒழுங்கிற்கு டிஜிபியாக இருந்த லத்திகா சரணுக்கு பிறகு 2 வது பெண் டிஜிபி என்ற பெருமையை சீமா அகர்வால் பெறுவார் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.இந்த நிலையில் சீமா அகர்வாலுக்கும் சந்தீராய் ரத்தோருக்கும் சமவாய்ப்பு உள்ளதாக காவல்துறை வட்டராங்கள் தகவல் தெரிவிக்கின்றனர்.